மன்னாரில் தேங்கியுள்ள மழை நீரை கடலுக்கு பாய்ச்சும் தீவிர நடவடிக்கையில் மன்னார் நகர சபை - படங்கள்
தொடர்ந்து பெய்து வந்த கடும் மழையின் காரணமாக மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களிலும் வெள்ள நீர் தேங்கி காணப்படுகின்றது. பல கிராமங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்து நிற்கின்றது.
இந்த நிலையில் மன்னார் செபஸ்தியார் பேராலய பிரதான வீதியில் மழை நீர் தேங்கி நிற்பதோடு அருகில் உள்ள வீடுகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது.
மழை நீரை வெளியேற்றும் முகமாக மன்னார் நகர சபை திங்கட்கிழமை மதியம் அப்பகுதியில் உள்ள கழிவு நீர் வாய்க்காலினை தோண்டி மழை நீரினை கடலுக்கு பாய்ச்சி வருகின்றனர்.
மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் குறித்த வேலைத்திட்டம் இடம் பெற்று வருகின்றது.
அவருடன் நகர சபையின் செயலாளர் லேனாட் பிரிட்டோ, உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ், நகர சபை உறுப்பினர் இரட்னசிங்கம் குமரேஸ் ஆகியோரின் மேற்பார்வையில் மன்னார் நகர சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்களும் இணைந்து குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
வாய்க்கால் தோண்டப்பட்டு மழை நீர் கடலுக்கு பாய்ச்சப்பட்டு வருகின்றமையினால் நீர் வழிந்தோடுகின்றமையினை காணக்கூடியதாக உள்ளது.
மன்னாரில் தேங்கியுள்ள மழை நீரை கடலுக்கு பாய்ச்சும் தீவிர நடவடிக்கையில் மன்னார் நகர சபை - படங்கள்
Reviewed by NEWMANNAR
on
November 12, 2013
Rating:

No comments:
Post a Comment