அண்மைய செய்திகள்

recent
-

எதிர்க்கட்சித்தலைவர் பதவியை துறக்க வேண்டும்: அமைச்சர் டக்ளஸ்

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியன் கொலை தொடர்பாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் காரணமாக தனது கட்சியை சேர்ந்த கே.கமலேந்திரனை வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை துறக்குமாறு கேட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நேற்று வியாழக்கிழமை கூறினார்.

டானியல் றெக்ஷியன்; ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியமான செயற்பாட்டாளர். இவரது கொலை தொடர்பில் கமலேந்திரன் மற்றும் கொல்லப்பட்ட றெக்ஷியனின் மனைவி ஆகியோரின் பெயர்கள் சம்பந்தப்பட்டுள்ளன என அமைச்சர் தேவானந்தா கூறினார்.

கமலேந்திரனுக்கு எதிராக குற்றச்சாட்டு உள்ளது அவர் இப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவர் கட்சியிலும் வடமாகாண சபையிலும் அவர் வகிக்கும் பதவிகள் சகலதையும் இராஜினாமா செய்யும்படி நான் அவரை கேட்டுள்ளேன். தான் குற்றமற்றவர் என நீதிமன்றில் அவர் நிரூபிப்பாராயின் அவரை திரும்பவும் சேர்த்துக் கொள்வதுபற்றி யோசிக்கலாம் என்றும் அமைச்சர் கூறினார்.

தான் ஒரு இக்கட்டான நிலையில் இருப்பதாக அமைச்சர் கூறினார். கமலேந்திரனின் பெற்றோரும் இரண்டு சகோதரர்களும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நீண்டகால ஆதரவாளர்கள் என்றும் அவர் கூறினார்.

இருப்பினும் நான் கட்சியின் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும். இவர் சகல பதவிகளையும் துறக்க வேண்டும் இல்லாதுவிடின் நான் அவரை சகல பதவிகளிலிருந்தும் அகற்றுவேன் என அமைச்சர் கூறினார்.

எதிர்க்கட்சித்தலைவர் பதவியை துறக்க வேண்டும்: அமைச்சர் டக்ளஸ் Reviewed by Author on December 06, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.