அண்மைய செய்திகள்

recent
-

நம்பகமான உள்ளக விசாரணைக்கு ஆதரவு அளிக்கத் தயார் - பிரித்தானியா

இலங்கையில் நம்பகமானதும், சுயாதீனமானதுமான விசாரணைகள் நடத்தப்பட்டால் அதற்கு பூரண ஆதரவளிக்கத் தயார் என பிரித்தானியா அறிவித்துள்ளது. 


யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மெய்யானதும், நம்பகமானதுமான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்தால் அதற்கு முழு அளவில் ஒத்துழைப்ப வழங்கத் தயார் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. 

எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னதாக நம்பகமான உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகள் அமைச்சர் ஹியூகோ ஸ்வயார் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உள்ளிட்ட தற்போது இலங்கையில் அமுல்படுத்தப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்கள் சர்வதேச தர நிர்ணயங்களை எட்டவில்லை என அவர் தெரிவித்துள்ளார். 
நம்பகமான உள்ளக விசாரணைக்கு ஆதரவு அளிக்கத் தயார் - பிரித்தானியா Reviewed by Author on January 30, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.