அண்மைய செய்திகள்

recent
-

மேல், தென் மாகாண சபை தேர்தலுக்கு 1,200 மில்லியன் ரூபா செலவு: திணைக்களம்

கடைசியாக நடைபெற்ற தேர்தலுக்கு செலவான 874 மில்லியன் ரூபாவுடன் ஒப்பிடுமிடத்து மேல் மற்றும் தென் ஆகிய மாகாண சபைகளுக்கான தேர்தலுக்கு 1,200 மில்லியன் ரூபா செலவாகும் என தேர்தல் திணைக்களம் மதிப்பிடப்பட்டுள்ளது.

"இலங்கையிலுள்ள 14.1 மில்லியன் வாக்காளர்களில் ஆறு மில்லியன் வாக்காளர்கள் இந்த இரண்டு மாவட்டங்களில் உள்ளனர். இவ்வாறு பெருந்தொகை வாக்காளர்கள் காணப்படுகின்றமையே செலவு அதிகரிப்புக்கான பிரதான காரணமாகும்" என தேர்தலகள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

"அடிப்படை செலவுகள், வாக்காளர் அட்டை மற்றும் வாக்குச்சீட்டு அச்சிடல் உள்ளிட்ட பல செலவுகள் உள்ளன. இது சாதாரணமாக வாக்காளர் ஒருவருக்கு 200 ரூபாவரை செலவாகும். இதுவே அடிப்படை மதிப்பீடாகும்" என அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேல், தென் மாகாண சபை தேர்தலுக்கு 1,200 மில்லியன் ரூபா செலவு: திணைக்களம் Reviewed by Author on January 30, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.