அரசாங்கம் இனவாதமின்றி தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; சஜித் பிரேமதாச
அரசாங்கம் இனவாதமின்றி தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை தேசத்துரோகிகள் என அமைச்சர் விமல் வீரவன்ஸ் கொக்கரித்தாலும் உண்மையான தேசத்துரோகிகள் கூட்டமைப்பினர் அல்லம், போருக்கு பின்னரும் வடக்கு வாழ் மக்களுக்கு உரிமைகளை வழங்காத இன்றைய அரசாங்கமே உண்மையான தேசத்துரோகி, வீரவன்ஸ உட்பட அரசாங்க தரப்பினர் எதனை கூறினாலும் தமக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தவிர தமக்கு வேறு உதவியாளர் இல்லை என வடக்கில் உள்ள தமிழ் மக்கள் நம்புகின்றனர்.
இதன் காரணமாகவே கூட்டமைப்புக்கு அங்குள்ள மக்கள் இரண்டில் மூன்று பெரும்பான்மை ஆணையை வழங்கினர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போருக்கு பின்னர் கடந்துள்ள காலப்பகுதியில் அரசாங்கம், தமிழ் மக்களுக்கு உண்மையான நியாயத்தை நிறைவேற்றியிருந்தால், இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அங்கு இடமிருந்திருக்காது. உண்மையான தேசப்பற்றாளர்கள் என்றால், அரசாங்கம் இனவாதமின்றி தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

இதன் காரணமாகவே கூட்டமைப்புக்கு அங்குள்ள மக்கள் இரண்டில் மூன்று பெரும்பான்மை ஆணையை வழங்கினர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போருக்கு பின்னர் கடந்துள்ள காலப்பகுதியில் அரசாங்கம், தமிழ் மக்களுக்கு உண்மையான நியாயத்தை நிறைவேற்றியிருந்தால், இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அங்கு இடமிருந்திருக்காது. உண்மையான தேசப்பற்றாளர்கள் என்றால், அரசாங்கம் இனவாதமின்றி தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்
அரசாங்கம் இனவாதமின்றி தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; சஜித் பிரேமதாச
Reviewed by Author
on
January 31, 2014
Rating:

No comments:
Post a Comment