அண்மைய செய்திகள்

recent
-

பால் மாடுகள் இறக்குமதி செய்யவென நெதர்லாந்து வங்கியில் கடன்பெற அனுமதி

தேசிய பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் பால் மாடுகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

நிதித் திட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் யோசனைக்கு அமைய நெதர்லாந்து அரசாங்கத்துடன் கடன் உடன்படிக்கை ஒன்றை செய்துகொள்ள அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 

தேசிய பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் 4500 பால் மாடுகளை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் 2000 பால் மாடுகள் அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 

மேலும் 2500 பால் மாடுகள் அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளன. 

அதற்கு மேலாக 20,000 பால் மாடுகளை இறக்குமதி செய்ய கடன் பெறும் திட்டத்தின் கீழ் நெதர்லாந்து வங்கி ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது. 

பால் மாடுகள் இறக்குமதி செய்யவென நெதர்லாந்து வங்கியில் கடன்பெற அனுமதி Reviewed by Author on January 16, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.