அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா,புளியங்குளம் ரயில் விபத்து; தந்தையும் மகனும் பலி

வவுனியா, புளியங்குளம் ரயில் கடவையில் இன்று காலை இடம்பெற்ற ரயில் விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். 

 இந்த விபத்து இன்று காலை 7.45 அளவில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளதாக வவுனியா ரயில் நிலைய சிரேஷ்ட அதிபர் நா. தவானந்தன் தெரிவித்தார்.

 பளையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிவேக ரயிலில் இவர்கள் இருவரும் மோதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 தந்தையும் மகனும் மோட்டார் சைக்கிள் மூலம் ரயில் கடவைக்கு அருகால் சென்றபோதே, ரயிலில் மோதுண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிடுகின்றது. ஒலுமடு பகுதியை சேர்ந்த இருவரே ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
வவுனியா,புளியங்குளம் ரயில் விபத்து; தந்தையும் மகனும் பலி Reviewed by NEWMANNAR on March 08, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.