அண்மைய செய்திகள்

recent
-

வட­ப­குதி ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்குப் புல­னாய்வுச் செய்தி சேக­ரிப்பை ஊக்­கு­விக்க பயிற்­சிகள் விரைவில்.

வட­ப­குதி ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்குப் புல­னாய்வுச் செய்தி சேக­ரிப்பை ஊக்­கு­விக்கும் வகையில் பயிற்­சிகள், செய­ல­மர்­வுகள் நடத்த ஏற்­பா­டுகள் இடம்­பெற்று வரு­கின்­றன என ஸ்ரீலங்கா டிரான்ஸ்­பே­ரன்ஸி இன்­டர்­நெ­ஷனல் அமைப்பின் பணிப்­பாளர் எஸ்.அனுகே தெரி­வித்தார்.



யாழ்.ஊடக அமை­யத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை குறித்த அமைப்­பினர் ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்துப் பேசி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.


அவர் அங்கு மேலும் கூறு­கையில்,


தென்­னி­லங்­கை­யி­லுள்ள செய்­தி­யா­ளர்­க­ளுடன் ஒப்­பி­டும்­போது புல­னாய்வுச் செய்­தியில் வட­ப­குதி ஊட­க­வி­ய­லா­ளர்­களின் பங்­க­ளிப்பு போது­மா­ன­தாக இல்லை. இதற்குக் காரணம் இங்கு இடம்­பெற்ற யுத்­த­மா­கவும் இருக்­கலாம்.


இனி­வரும் காலங்­க­ளி­லா­வது புல­னாய்வுச் செய்­தி­யினை அர­சியல் வேறு­பா­டின்றி சகல தரப்­பு­டனும் இணைந்து சகல விட­யங்­க­ளிலும் முன்­னெ­டுத்து புல­னாய்வுச் செய்­தியை அறிக்­கை­யிட வேண்டும்.


இதற்­காக வட பகுதி ஊட­க­வி­ய­லாளர்­க­ளுக்­கான ஒரு தனி­யான பயிற்சி நெறி ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. இதற்கு ஊடக வியலாளர்கள் கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. மாறாக குறித்த நிறுவனம் ஊக்குவிப்பை வழங்கும் என்றார்.
வட­ப­குதி ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்குப் புல­னாய்வுச் செய்தி சேக­ரிப்பை ஊக்­கு­விக்க பயிற்­சிகள் விரைவில். Reviewed by NEWMANNAR on April 04, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.