இலங்கையில் தஞ்சம் புகும் போராட்டம்: படகுகளில் வெள்ளைக்கொடி கட்டிய மீனவர்கள்
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகளை தடுக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 2ஆம் தேதி இலங்கையில் தஞ்சம் புகும் போராட்டத்தை நடத்தவுள்ளனர். இந்த போரட்டத்தின் அடையாளமாக மீனவர்கள் தங்கள் படகுகளில் வெள்ளை கொடி கட்டியுள்ளனர்.
இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 38 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தியும், இலங்கை கடற்படையினரின் பிடியில் உள்ள 55 விசைப்படகுகளையும் மீட்டு தரக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த 26ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று (28ஆம் தேதி) இரண்டாம் கட்ட போராட்டமாக படகின் உரிமங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை அறிவித்திருந்தனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார், மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து படகுகளின் உரிமத்தை ஒப்படைக்கும் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில், தங்கள் இறுதி கட்ட போராட்டமான இலங்கையில் தஞ்சம் புகும் போராட்டத்தை வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி நடத்துவதின் அடையாளமாக நேற்று ராமேஸ்வரம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளில் வெள்ளை கொடிகளை கட்ட துவங்கினர்.
ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டங்கள் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் 28ஆம் தேதி நாகப்பட்டிணத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 50 மீனவர்களையும் 7 படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றுள்ளது மீனவர்கள் மத்தியில் மேலும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் தஞ்சம் புகும் போராட்டம்: படகுகளில் வெள்ளைக்கொடி கட்டிய மீனவர்கள்
Reviewed by NEWMANNAR
on
July 30, 2014
Rating:

No comments:
Post a Comment