அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சர்வமத தலைவர்களை ஒன்றிணைக்கும் வகையில் 'சர்வமத நட்புக்கான பயணம்' எனும் கருப்பொருளில் விசேட நிகழ்வு.-Photo


நல்லிணக்கத்திற்கான வடக்கு,கிழக்கு சர்வமத ஒன்றியம் மற்றும் மன்னார் சர்வமதப்பேரவை ஆகியவற்றின் அனுசரணையுடன் 'நெய்வர்' என்ற அமைப்பின் ஏற்பாட்டில் 'சர்வமத நட்புக்கான பயணம்' எனும் கருப்பொருளில் மன்னாரில் சர்வமதத்தலைவர்கள் மற்றும் மத குருக்களாக பயிற்சி பெறும் மாணவர்களுக்கான ஒன்று கூடல் நிகழ்வு இன்று (09-11-2014) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் மடுமாதா சிறிய குருமடத்தில் மன்னார் சர்வமத பேரவையின் தலைவர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் தலைமயில் இடம் பெற்றது.

அனுராதபுரம் மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் உள்ள சர்வமதத்தலைவர்கள்,மத குருமார்களாக பயிற்சி பெறும் பௌத்த, இஸ்லாமிய சமயம் சார்ந்த மாணவர்களும் மன்னாருக்கு வருகை தந்தனர்.

மன்னாரில் மதகுருக்களாக பயிற்சி பெறும் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மாணவர்கள்,சர்வமதத்தலைவர்கள் மற்றும் சமூகத்தலைவர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து விசேட சர்வமத நிகழ்வு இடம் பெற்றது.

இதன் போது சர்வமதத்தலைவர்கள்,மதகுருக்களாக பயிற்சி பெறும் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டில் சமாதானத்தையும்,ஒற்றுமையையும் ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் பல்வேறு விடையங்கள் தொடர்பிலும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

இதன் போது சிறப்பு விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்கள் கலந்து கொண்டு உரை ஆற்றினார்.இதன் போது மன்னார் சர்வ மத பேரவையின் அங்கம் வகிக்கும் அனைத்து சர்வமதத்தலைவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















மன்னாரில் சர்வமத தலைவர்களை ஒன்றிணைக்கும் வகையில் 'சர்வமத நட்புக்கான பயணம்' எனும் கருப்பொருளில் விசேட நிகழ்வு.-Photo Reviewed by NEWMANNAR on November 09, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.