அமைச்சர் றிஸாட் பதியுதீனுக்கு ஹீனைஸ் எம்.பி பாராட்டு-Photo
நல்லாட்சிக்கான பயணத்தில் இணைந்திருக்கும் அமைச்சர் றிஸாட் பதியூதினை வரவேற்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் தெரிவித்துள்ளார்.
மன்னார் மூர் வீதியில் நேற்று திங்கட்கிழமை (22.2.2014)மாலை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் அவ்வாறு தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில்,,,
தற்போதைய ஆளும் அரசாங்கத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராகிய நான் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி பொது வேட்பாளரை ஆதரிப்பது என்று முடிவெடுத்திருந்தேன்.அதற்கமைவாக செயற்பட்டு வருகின்றேன்.
அதற்கமைவாக இன்று அவ் அணியின் வெற்றிக்காக உழைத்துக்கொண்ணடிருக்கின்றேன்.
கறை படிந்த தற்போதைய அரசாட்சியை அகற்றி நல்லாட்சி நோக்கிய பயணத்தில் இணைந்து கொண்டிருக்கின்றோம்.
இந்நிலையில் நேற்று (22) அமைச்சர் றிஸாட் பதியூதீன் மற்றும் அவரது ஆதரவாளர்களும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி பொது எதிரணியின் பக்கம் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களின் முடிவிற்கு பாராட்டு தெரிவித்து அவரின் இந்த நல்லாட்சி நோக்கிய பயணத்தில் இணைந்து கொண்டமையினை மகிழ்சியோடு வரவேற்கின்றோம்.
அமைச்சர் எதிரணியினர் பக்கம் சென்று விட்டாரே என்று எவரும் கவலைப்படத் தேவையில்லை.
நாம் எந்த வித பாகு பாடுகளும் இன்றி அதிகாரங்களை பகிர்ந்து சேவையாற்றுவோம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் மேலும் தெரிவித்தார்.
அமைச்சர் றிஸாட் பதியுதீனுக்கு ஹீனைஸ் எம்.பி பாராட்டு-Photo
Reviewed by NEWMANNAR
on
December 23, 2014
Rating:
No comments:
Post a Comment