அண்மைய செய்திகள்

recent
-

பிரசார நடவடிக்கைகளில் பொது சொத்துகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது – ட்ரான்பேரன்ஸி

ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பொது சொத்துக்களை பயன்படுத்துகின்றமை வெகுவாக அதிகரித்துள்ளதாக இலங்கை ட்ரான்ஸ்பேரன்ஸி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நிறுவனங்களில் கடமையாற்றும் உயர் நிலை அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளுக்காக தமது நேரடி பங்களிப்பை வழங்குவதாக இலங்கை ட்ரான்ஸ்பேரன்ஸி நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சட்டத்தரணி எஸ்.ரணுன்கே குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தேர்தல்கள் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளினால் அரச நிறுவனங்களுக்கு பாரியளவு நட்டம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டிய இலங்கை ட்ரான்ஸ்பேரன்ஸி நிறுவனம் இதனை உடனடியாக நிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை அரச சொத்துக்கள் மற்றும் அரச அதிகாரிகளை அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியமைத் தொடர்பில் 76 முறைப்பாடுகள் தேர்தல்கள் செயலகத்திற்கு பதிவாகியுள்ளன.

அரச அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பில் 29 முறைப்பாடுகளும் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் தொடர்பில் 32 முறைப்பாடுகளும் இதில் அடங்குவதாக முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் குறித்த பிரிவு அறிவித்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
பிரசார நடவடிக்கைகளில் பொது சொத்துகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது – ட்ரான்பேரன்ஸி Reviewed by NEWMANNAR on December 18, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.