மன்னாரில் சுனாமி நினைவு தினம் அனுஸ்ரிப்பு.(Photos
சுனாமி ஏற்பட்டு ஒரு தசாப்தமாகியுள்ள நிலையில், நாட்டின் பல பாகங்களிலும் சுனாமி பேரழையினால் உயிர் நீர்த்தவர்களை இன்றைய தினம் நினைவு கூர்ந்தனர்.
-இந்த நிலையில் சுனாமி பேரழையினால் காவுகொள்ளப்பட்ட மக்களின் 10 ஆவது வருட நினைவு மன்னாரில் அனுஸ்டிக்கப்பட்டது.மன்னார் திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் மோகன் ராஜ் தலைமையில் இன்று காலை மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமேல்,உற்றும் திணைக்கள தலைவர்கள் ,அரசியல் பிரமுகர்கள்,சமூக ஆர்வலர்கள் அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள் என பலர் கலந்து கொண்டு தீச்சுடர் ஏற்றி உயிர் நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.அதனைத்தொடர்ந்து சிறப்பு உரைகளும் இடம் பெற்றது.
மன்னாரில் சுனாமி நினைவு தினம் அனுஸ்ரிப்பு.(Photos
Reviewed by Admin
on
December 26, 2014
Rating:

No comments:
Post a Comment