அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 8 பேர் மருத்துவ துறைக்கு தெரிவு

வவுனியா, தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இருந்து 8 பேர் மருத்துவத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் எம்.எஸ்.பத்மநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

3 பாடங்களில் ஏ சித்தியை பெற்று மாவட்டத்தில் முதலாமிடத்தினையும் தேசிய ரீதியில் 19 ஆம் இடத்தினையும் பெற்று அதி சிறப்பு சித்தியை எஸ்.மேகலாகரனும், அதி சிறப்பு சித்தியினையும் 3 பாடங்களில் ஏ சித்தியையும் மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் தேசிய ரீதியில் 21 ஆம் இடத்தினையும் பெற்ற பி.வைஸ்ணவன் உட்பட 7 பேர் மருத்துவதுறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கணித பிரிவில் 3 பாடங்களில் ஏ சித்தியை பெற்று ஆர்.கிரோஸ்குமார் மாவட்டத்தில் முதலாமிடத்தினை பெற்று பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், எஸ். ஜெனோதன், ஜெ. ரிசான், எஸ். ருசாந், ஆர். கஜானன், எஸ். துசாந் ஆகியோர் பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இது தவிர, வர்த்தக துறையில் மாவட்ட ரீதியில் 3 ஆம் இடத்தினை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 8 பேர் மருத்துவ துறைக்கு தெரிவு Reviewed by NEWMANNAR on December 29, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.