கிறிஸ்துமஸ் பெருவிழா (சிறப்புக் கட்டுரை )
நத்தார் பண்டிகை உலகமெங்கும் கோலாகலாமாக டிசம்பர் 25 அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. நத்தார் என்றவுடன் நம் நினைவிற்கு வருவபை விடுமுறை நாட்கள் ஆலய வழிபாடுகள் புது ஆடைகள் ,உறவினர் வீடுகட்கு வருகை மற்றும் பல விதமான உணவு வகைகளே ! கிறிஸ்தவ மத வரலாற்றில் ஓர் மாபெரும் திருப்ப நினைவாக இத்தினம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகின்றது.
முதலில் ஓர் மத அனுஸ்டானமாக உருவெடுத்த இந்நாள் பின்நாட்களில் காப்பரேட்டுக்களின் துாண்டுதலால் மதங்களை கடந்து உலக மக்கள் அனைவரும் கொண்டாடும் ஓர் நாளாக உருவெடுத்துள்ளது. வருட இறுதியில் இத்தினம் அமைந்திருப்பதால் முழுவருடத்தின் களைப்பை தீர்க்க இறுதிப்பாகத்தின் இறுதிநாட்கள் உதவுகின்றன. இதை ஊக்குவிப்பது போல் காப்பரேட்டுக்களும் தள்ளுபடிகள்இ சலுகைகள் மற்றும் இலவசங்கள் என அள்ளி வழங்குகின்றன.
நவீன வரலாற்றாசிரியர்களின் கணிப்பின் படி கிறிஸ்துவின் பிறப்பானது கி.மு 7 ஆம் நுாற்றாண்டிற்கும் கி.மு 2ஆம் நுாற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களால் சரியாக இயேசுக்கிறிஸ்து பிறந்த மாதம் மற்றும் திகதியை கணிப்பிட முடியவில்லை.
உண்மையில் கிழக்கு கிறிஸ்தவம் ((Eastern Christianity)) முன்னயை காலத்தில் ஜனவரி 6 ஆம் திகதியே நத்தாரை கொண்டாடியது. இது முன்னைய ஜீலியன் நாட்காட்டியுடன் சம்மந்தப்பட்ட கணிப்பாகும். ஆனாலும் இவ்வழக்கம் 14ஆம் நுாற்றாண்டின் நடுப்பகுதிகளில் உரோம கத்தோலிக்க திருச்சபையின் ((Church bishops in Rome) ) முடிவால் மாற்றியமைக்கப்பட்டு மார்கழி 25 என பின்னர் கிழக்கு திருச்சபையாலும் ஏற்கப்பட்டது.
இதற்கு முதற்காரணமாக அமைந்தது இயேசுக்கிறிஸ்துவை உலகம் முழுவதும் ஏற்கச் செய்வதும் கிறிஸ்தவ மத நம்பிக்கையை உலகம் முழுவதும் பரப்புவதும் ஆகும். உதாரணமாக உரோம சாம்ராட்சியமும் அதனுடன் தொடர்புடைய பெரும் எண்ணிக்கையான மக்கள் கூட்டமும் சூரியனையே தமது முழு முதற் கடவுளாகவும் தமக்கு சக்தி அளிப்பவராகவும் எண்ணி வழிபட்டனர். அவர்கள் குறிப்பாக தமக்கு கிடைத்த மிக குறுகிய காலமாகிய குளிர் கால மார்கழியில் சூரியக்கடவுளிற்கு தமது ஆராதனைகளையும் சடங்குகளையும் செய்து வந்தனர். ஏனெனில் குளிர்காலத்தில் ஓய்வு எடுக்கும் சூரியக்கடவுள் ஓய்வு நிறைவுற்ற பின்னர் தமக்கு ஆசீர்வாதங்களையும் அதிக சக்தியையும் வழங்குவார் என அம்மக்கள் எதிர்பார்த்தனர். எனவே அக்காலத்தில் கிறிஸ்துவின் பிறப்பு அமைவதானது அவரை ஆராதனைக்குரியவராக இயல்பானதாகவே அம்மக்களிடையே ஆக்கிவிடும். எனவே அவர்களது மரபுகளுடன் முரண்படாத ஓர் உட்திணிப்பு உண்மையில் வெற்றி பெற்றதென்றே கூறலாம்.
எது எவ்வாறு இருப்பினும் 'கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்' எனும் திருச்சபையின் பழைய கோட்பாடுகளை மாற்றியமைத்து மானிடரின் பாவத்திற்காக தனது உயிரை கையளித்த இயேசு பிரானின் வருகையும் உலகின் பாவத்திற்காக தமது குமாரனையே கையளிக்க மனமிரங்கிய தந்தையின் உள்ளமும் உண்மையில் திருச்சபைக்கு மட்டுமின்றி உலக மக்கள் அனைவருக்கும் அன்பு எனும் மகத்தான செய்தியை அறிவித்தது. அது ஒவ்வொரு மார்கழி 25 இலும் நினைவூட்டப்படுவது உண்மையில் நிறைவானதே!
நாத்திகராக இருப்பினும் நண்பரின்றி இருப்பது யாருக்கும் இல்லாமையேஇ நண்பனுக்காக உயிரை விடுவது இலகுவானது ஆனால் உயிரை விடக்கூடிய நண்பர்கள் கிடைப்பது கடினமானது எனும் படிப்பினைக்கிணங்க உனக்காக உயிரை விட இயேசுக்கிறிஸ்துவை விட சிறந்த நண்பன் நமக்கு யார் ?
அ.அர்ஜின்
LL.B (Hons)
முதலில் ஓர் மத அனுஸ்டானமாக உருவெடுத்த இந்நாள் பின்நாட்களில் காப்பரேட்டுக்களின் துாண்டுதலால் மதங்களை கடந்து உலக மக்கள் அனைவரும் கொண்டாடும் ஓர் நாளாக உருவெடுத்துள்ளது. வருட இறுதியில் இத்தினம் அமைந்திருப்பதால் முழுவருடத்தின் களைப்பை தீர்க்க இறுதிப்பாகத்தின் இறுதிநாட்கள் உதவுகின்றன. இதை ஊக்குவிப்பது போல் காப்பரேட்டுக்களும் தள்ளுபடிகள்இ சலுகைகள் மற்றும் இலவசங்கள் என அள்ளி வழங்குகின்றன.
நவீன வரலாற்றாசிரியர்களின் கணிப்பின் படி கிறிஸ்துவின் பிறப்பானது கி.மு 7 ஆம் நுாற்றாண்டிற்கும் கி.மு 2ஆம் நுாற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களால் சரியாக இயேசுக்கிறிஸ்து பிறந்த மாதம் மற்றும் திகதியை கணிப்பிட முடியவில்லை.
உண்மையில் கிழக்கு கிறிஸ்தவம் ((Eastern Christianity)) முன்னயை காலத்தில் ஜனவரி 6 ஆம் திகதியே நத்தாரை கொண்டாடியது. இது முன்னைய ஜீலியன் நாட்காட்டியுடன் சம்மந்தப்பட்ட கணிப்பாகும். ஆனாலும் இவ்வழக்கம் 14ஆம் நுாற்றாண்டின் நடுப்பகுதிகளில் உரோம கத்தோலிக்க திருச்சபையின் ((Church bishops in Rome) ) முடிவால் மாற்றியமைக்கப்பட்டு மார்கழி 25 என பின்னர் கிழக்கு திருச்சபையாலும் ஏற்கப்பட்டது.
இதற்கு முதற்காரணமாக அமைந்தது இயேசுக்கிறிஸ்துவை உலகம் முழுவதும் ஏற்கச் செய்வதும் கிறிஸ்தவ மத நம்பிக்கையை உலகம் முழுவதும் பரப்புவதும் ஆகும். உதாரணமாக உரோம சாம்ராட்சியமும் அதனுடன் தொடர்புடைய பெரும் எண்ணிக்கையான மக்கள் கூட்டமும் சூரியனையே தமது முழு முதற் கடவுளாகவும் தமக்கு சக்தி அளிப்பவராகவும் எண்ணி வழிபட்டனர். அவர்கள் குறிப்பாக தமக்கு கிடைத்த மிக குறுகிய காலமாகிய குளிர் கால மார்கழியில் சூரியக்கடவுளிற்கு தமது ஆராதனைகளையும் சடங்குகளையும் செய்து வந்தனர். ஏனெனில் குளிர்காலத்தில் ஓய்வு எடுக்கும் சூரியக்கடவுள் ஓய்வு நிறைவுற்ற பின்னர் தமக்கு ஆசீர்வாதங்களையும் அதிக சக்தியையும் வழங்குவார் என அம்மக்கள் எதிர்பார்த்தனர். எனவே அக்காலத்தில் கிறிஸ்துவின் பிறப்பு அமைவதானது அவரை ஆராதனைக்குரியவராக இயல்பானதாகவே அம்மக்களிடையே ஆக்கிவிடும். எனவே அவர்களது மரபுகளுடன் முரண்படாத ஓர் உட்திணிப்பு உண்மையில் வெற்றி பெற்றதென்றே கூறலாம்.

நாத்திகராக இருப்பினும் நண்பரின்றி இருப்பது யாருக்கும் இல்லாமையேஇ நண்பனுக்காக உயிரை விடுவது இலகுவானது ஆனால் உயிரை விடக்கூடிய நண்பர்கள் கிடைப்பது கடினமானது எனும் படிப்பினைக்கிணங்க உனக்காக உயிரை விட இயேசுக்கிறிஸ்துவை விட சிறந்த நண்பன் நமக்கு யார் ?
அ.அர்ஜின்
LL.B (Hons)
கிறிஸ்துமஸ் பெருவிழா (சிறப்புக் கட்டுரை )
Reviewed by NEWMANNAR
on
December 24, 2014
Rating:

No comments:
Post a Comment