அண்மைய செய்திகள்

recent
-

காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் விசாரனையை நிறுத்தக்கோரி மன்னாரில் நாளை போராட்டம்.



காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை  மேற்கொள்ளும் ஆணைக்குழுவின் விசாரணையை இடை நிறுத்தி சர்வதேச விசாரனைக்குழு நியமிக்கப்பட்டு விசாரனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரி நாளை திங்கட்கிழமை (23)மன்னாரில் கண்டன போராட்டம் இடம் பெறவுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் சங்கமம் மற்றும் பிரஜைகள் குழுக்களின் ஒன்றியம் வடக்கு,கிழக்கு ஆகியவை இணைந்து குறித்த கண்டன போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

மன்னார்,வவுனியா உற்பட வடக்கு,கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் குறித்த கண்டனப்போராட்டம் ஒரே நேரத்தில் இடம் பெறவுள்ளது.

இந்த நிலையில் நாளை திங்கட்கிழமை(23) காலை 9 மணிக்கு மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் குறித்த கண்டனப்போராட்டம் இடம் பெறவுள்ளது.

காணாமல் போன ஆணைக்குழு மேற்கொண்டு வரும் விசாரணைகளில் நம்பிக்கை இல்லை என கோரியும்,காணாமல் போனவர்கள் தொடர்பில் உடனடியாக சர்வதேச தரத்தில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரியும் குறித்த கண்டன போராட்டம் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் விசாரனையை நிறுத்தக்கோரி மன்னாரில் நாளை போராட்டம். Reviewed by NEWMANNAR on March 22, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.