மக்கள் நலனைக் கவனத்தில் கொண்டு ஒவ்வொரு உறுப்பினரும் தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.-குமரேஸ்.
மக்கள் நலனைக் கவனத்தில் கொண்டு மன்னார் நகர சபையின் ஒவ்வொரு உறுப்பினரும் தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ரெட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.
மன்னார் நகர சபையின் 48 வது சபை அமர்வு 17-03-2015 அன்று தலைவர் எஸ். ஞானப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது.
இவ் அமர்வில் கலந்து கொண்டு நகர சபை உறுப்பினர் எஸ். ரெட்ணசிங்கம் குமரேஸ் உரை நிகழ்த்துகையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,
இன்றைய நாள் எமது உள்ளுராட்சி மன்ற தேர்தல் நான்கு வருடங்களுக்கு முன் நடைபெற்ற நாளாகவும் இது எமது கடைசி கூட்டமாவும் இருக்கக்கூடும். எவ்வாறாயினும் மக்கள் நலனைக் கவனத்தில் கொண்டு நாம் ஒவ்வொரு உறுப்பினரும் தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.
எமது பதவிக்காலம் முடிந்து விட்டதென்று ஒதுங்கியிருக்க முடியாது. எமது சபையால் தீர்மானிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்ற வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்புக்கள் தொடர்ந்தும் வழங்க வேண்டும்.
சபை இல்லாமல் போகும் காலங்களில் இவ் நிர்வாகத்திற்கும் செயலாளருக்கும் ஏற்படுகின்ற அரசியல் மற்றும் ஏனைய நெருக்கடிகளுக்கு நாம் அனைவரும் முன்வந்து ஒத்துழைப்புச் செய்து இவ் நிர்வாகத்தினை பலப்படுத்தி வழி நடாத்த வேண்டும். என்பதோடு சில முக்கிய தீர்மானங்களையும் சபையில் முன் மொழிந்தார்.
*எதிர்வரும் நாட்களில் விசேட கூட்டத்தை கூட்டி சபை இல்லாத காலங்களில் இவ் உறுப்பினர்களையும் உள்ளடக்கி ஓர் ஆலோசனை குழுவினை அமைக்க வேண்டும்.
*ஏற்கெனவே எமது சபையால் தீர்மானிக்கப்பட்ட வேலைத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயலாளரினால் தொடர்ந்து செயல்படுத்தப்படவேண்டும்.
*மறை மாவட்டத்தின் பொது அமைப்புக்கள் கத்தோலிக்க ஆலய சபைகளின் வேண்டுகோளுக்கமைய வணக்கத்திற்குரிய அதிமேதகு இராயப்பு யோசப் ஆண்டகையின் 75 வது பிறந்த தினத்தினை முன்னிட்டு பிரதான வீதியில் இருந்து சிறிய குருமடத்திற்கு வரும் வீதிக்கு ஆண்டகையுடைய பெயரினை வைக்க வேண்டும் எனவும் கோரி தீர்மானமாகவும் கொண்டு வந்தார்.
இத் தீர்மானங்களை தலைவர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் ஏக மனதாக ஏற்று தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் இந்த நான்கு வருட காலப் பகுதியில் எமது சபை நடவடிக்கைகளுக்கும் ஏனைய விடயங்களுக்கும் ஒத்துழைத்து உதவிய மக்கள், உள்ளுராட்சி திணைக்கள அதிகாரிகள், நகர சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள் ஏனைய நகர சபையின் அனைத்து பணியாளர்களுக்கும் சபையின் சார்பில் மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்.
குறித்த சபை அமர்வில் உப தலைவர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மக்கள் நலனைக் கவனத்தில் கொண்டு ஒவ்வொரு உறுப்பினரும் தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.-குமரேஸ்.
Reviewed by NEWMANNAR
on
March 22, 2015
Rating:

No comments:
Post a Comment