அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 33 இந்திய மீனவர்கள் விடுதலை.-Photos


இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 33 இந்திய மீனவர்களும் இன்று செவ்வாய்க்கிழமை மன்னார் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த ஞாயிற்றக்கிழமை(22) அதிகாலை இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து 5 படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 33 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.

-லைமன்னார் கடற்படையினர் விசாரனைகளின் பின் மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

-கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை(22) மாலை குறித்த 33 இந்திய மீனவர்களையும் மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் அலெகஸ்;ராஜா ஆசிர்வாதம் கிறேசியன் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.

இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த 33 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை(24) இந்தியாவில் நடைபெறும் இந்திய - இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் வகையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிப்புக்கமைவாக இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இவர்களின் விடுதலை தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் அறிக்கை மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் குறித்த 33 இந்திய மீனவர்களும் இன்று செவ்வாய்க்கிழமை மாலை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது குறித்த மீனவர்கள் இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.









தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 33 இந்திய மீனவர்கள் விடுதலை.-Photos Reviewed by NEWMANNAR on March 24, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.