அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து 33 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.-Photos


இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 33 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் அலெகஸ்;ராஜா ஆசிர்வாதம் கிறேசியன் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) உத்தரவிட்டார்.

இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து 5 படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட 33 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தலைமன்னார் கடற்படையிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் கடற்படையினர் விசாரனைகளின் பின் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளினூடாக இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் அலெக்ஸ்ராஜா ஆசிர்வாதம் கிறேசியன் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.

இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த 33 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். 






தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து 33 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.-Photos Reviewed by NEWMANNAR on March 22, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.