தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து 33 இந்திய மீனவர்கள் கைது.
இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 33 இந்திய மீனவர்களை இன்று(22) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்த கடற்படையினர் குறித்த மீனவர்களை தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
5 படகுகளில் வருகை தந்த 33 இந்திய மீனவர்கலே இவ்வாறு கைது செய்யப்பட்டு கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
-குறித்த மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டனர்.
தலைமன்னார் கடற்படையினர் விசாரனைகளின் பின் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக கடற்தொழில் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து 33 இந்திய மீனவர்கள் கைது.
Reviewed by NEWMANNAR
on
March 22, 2015
Rating:

No comments:
Post a Comment