நடராஜா ரவிராஜின் கொலையுடன் தொடர்புடைய மூவர் கைது
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நடராஜா ரவிராஜின் கொலையுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் கடற்படையை சேர்ந்தவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.
ஏனைய இரண்டு சந்தேகநபர்களும் கடற்படையின் முன்னாள் உறுப்பினர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
தடுத்து வைக்கும் உத்தரவின் பேரில் சந்தேகநபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.
நடராஜா ரவிராஜின் கொலையுடன் தொடர்புடைய மூவர் கைது
Reviewed by NEWMANNAR
on
March 31, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 31, 2015
Rating:


No comments:
Post a Comment