பபுவா நியூகினியை உலுக்கிய 7.5 ரிச்டர் பூமியதிர்ச்சி
பபுவா நியூகினி கடற்கரைக்கு அப்பால் 7.5 ரிச்டர் அளவான பாரிய பூமியதிர்ச்சி திங்கட்கிழமை தாக்கியுள்ளது.
மேற்படி பூமியதிர்ச்சியால் கட்டடங்கள் நடுங்கியதால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளிகளையும் வீதிகளையும் தஞ்சமடைந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நியூ பிரிட்டன் தீவுகளிலுள்ள கொகொபோ நகரிலிருந்து 55 கிலோமீற்றர் தொலைவில் 33 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்தப் பூமியதிர்ச்சியையடுத்து சுனாமி பேரலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட போதும், பின்னர் அது நீக்கப்பட்டது. பிரதான பூமியதிர்ச்சியையடுத்து அதே பிரதேசத்தில் 5.7 ரிச்டர் அளவான பிறிதொரு பூமியதிர்ச்சி இடம்பெற்றுள்ளது. இந்த பூமியதிர்ச்சியால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இது வரை அறிக்கையிடப்படவில்லை
பபுவா நியூகினியை உலுக்கிய 7.5 ரிச்டர் பூமியதிர்ச்சி
Reviewed by NEWMANNAR
on
March 31, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 31, 2015
Rating:


No comments:
Post a Comment