காணி வழங்கப்பட்ட திருக்கேதீஸ்வரம் மக்களை வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் நேரில் சென்று பார்வை.-Photos
மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவன் வீதியில், திருக்கேதீஸ்வர கோயில் நிர்வாக சபையால் அங்குள்ள 40 குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அம்மக்களை நேற்று(21) நேரில் சென்று பார்வையிட்ட வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அந்த மக்களது தேவைகள் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடினார்.
விரைவில் வீதி மற்றும் குடிநீர் என்பன வழங்குவதற்கு ஆவ செய்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
குறித்த சந்திப்பின் போது மன்னார் வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர் எஸ்..ரகுநாதன் , மன்னார் மாவட்ட நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மாவட்ட பொறியியலாளர் நிமலன் கணேச ராஜா ஆகியோரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காணி வழங்கப்பட்ட திருக்கேதீஸ்வரம் மக்களை வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் நேரில் சென்று பார்வை.-Photos
Reviewed by NEWMANNAR
on
March 22, 2015
Rating:

No comments:
Post a Comment