காணாமற் போனோர் தொடர்பான இடைக்கால அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு!
காணாமற் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை இன்று பிற்பகல் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக அவ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
26 பக்கங்களைக் கொண்ட இவ் அறிக்கை காணாமற் போனோர் தொடர்பில் விசாரணை செய்த தகவல்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளதாக அவ் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
ஜானாதிபதி செயலகத்தில் நடைபெறும் இந் நிகழ்வில் ஆணைக்குழுவின் தலைவர் பரணகம மற்றும் அங்கத்தவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
காணாமாற் போனோர் தொடர்பிலான, மனித உரிமைகள் மீறல் சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வரும் இந்தக் குழுவின் இறுதி அறிக்கை ஓகஸ்ட் இறுதி வாரத்தில் வெளியாகவுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
காணாமற் போனோர் தொடர்பான இடைக்கால அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு!
Reviewed by NEWMANNAR
on
April 10, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 10, 2015
Rating:


No comments:
Post a Comment