அண்மைய செய்திகள்

recent
-

இறுதி அறிக்கை வரும் வரைக்கும் நன்னீர் விநியோகிக்க வேண்டும்:த.தே.கூ


சுன்னாகம் குடிநீரானது பாதுகாப்பனது என நிபுனர் குழுவின் இறுதி அறிக்கை வெளிவரும் வரைக்கும் குடிநீர் விநியோகிக்கப்பட வேண்டும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற நான்கு கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் இன்று முற்பகல் கொழும்பு மாதிவெலயில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் போதே இந்த கருத்தினை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இக்கூட்டத்தில் சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தினால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற நிலத்தடி நீர் பிரச்சினை சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான நிபுணர்குழு இது குடிப்பதற்கு பாதுகாப்பான தண்ணீர் என்று இறுதி அறிக்கையிடும் வரைக்கும் தொடர்ந்தும் குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள வேண்டும், தண்ணீர் இன்னும் தேவைப்படுமிடத்து மேலதிக நீர் விநியோகத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,இதற்காக மாகாண சபை மற்றும் பிரதேச சபைகளின் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென கூட்டமைப்புத் தலைவர்கள் தீர்மானித்தார்கள்.

இதேவேளை இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புரிந்துணர்வு உடன்படிக்கை சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருக்கின்ற விடயங்கள் சம்பந்தமாக தமிழரசுக் கட்சி கூடி ஒரு முடிவை எடுத்த பின்புதான் தாங்கள் இறுதி முடிவினை எடுக்க முடியும் என்று தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அதற்காக அவகாசம் கொடுக்கப்பட்டு, வருகின்ற 17, 18ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் கூடி இறுதி முடிவினை எடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிறேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதி அறிக்கை வரும் வரைக்கும் நன்னீர் விநியோகிக்க வேண்டும்:த.தே.கூ Reviewed by NEWMANNAR on April 08, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.