அண்மைய செய்திகள்

recent
-

இராணுவத்தினரை பலியிட்டு வெற்றிகொண்டவற்றை திருப்பிக்கொடுக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் : யுத்த வெற்றி நிகழ்வில் மஹிந்த


இரா­ணு­வத்­தி­னரை பலி­யிட்டு வெற்றி கொண்ட பாரிய கடற்பரப்­பி­னையும் இரண்டு மாகா­ணங்­களையும் மீண்டும் திருப்பிக் கொடுக்க ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார். வடக்கில் தமிழ்த் தலை­மைகள் சுதந்­தி­ர­மாக நட­மாடக் கார­ணமும் இரா­ணு­வத்­தி­னரே. அவர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்த ஒரு­வ­ரி­டமும் அனு­மதி பெற வேண்­டிய தேவை தமக்கு இல்லை எனவும் தெரி­வித்தார். கொழும்பு விகார மஹாதேவி பூங்கா வளா­கத்­தில நேற்று இடம் பெற்ற யுத்த வெற்றி நிகழ்வின் போதே அவர் மேற்­கண்டவாறு தெரி­வித்தார். இந் நிகழ்வில் முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்தபாய ராஜ­பக் ஷ, முன்னாள் ஆளுனர் அலவி மௌலானா மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான விமல் வீர­வன்ச, டலஸ் அழகப்­பெ­ரும, தினேஷ் குண­வர்த்­தன, டி.பி.ஏக்க­நா­யக்க, நாமல் ராஜ­பக் ஷ, கொழும்பு மாந­கர சபை உறுப்­பினர் மொஹமட் முஸம்மில் ஆகியோர் கலந்துகொண்­டி­ருந்­தனர். நிகழ்­வு சுதந்­தி­ரத்தின் தீப­வேலி என்று பெய­ரிடப்பட்­டி­ருந்த அதே­வேளை இந்­ நி­கழ்வின் போது பெரும் எண்­ணிக்­கை­யி­லான கலை­ஞர்கள் கலந்து கொண்­டி­ருந்­த­மையும் குறிப்­பிடத்தக்­கது. இதன் போது தொடர்ந்தும் உரை­யாற்­றிய முன்னாள் ஜனா­தி­பதி, எண்­ணி­ல­டங்­காத இரா­ணு­வத்­தி­னரை பலி­யிட்டு வெற்றிகொண்ட பாரிய கடல் பரப்­பி­னையும் இரண்டு மாகா­ணங்­களையும் மீண் டும் திருப்பிக் கொடுக்க ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. இது­வ­ரையில் புலி­க­ளிடம் அடி­ப­ணிந்து கொண்­டிருந்த அர­சாங்கம் ஒன்­றி­னையே காண முடிந்­தது. அதற்கு மாறாக தேசியக் கொடியை கையி­லேந்தி சுதந்­நிர காற்றை சுவா­சிக்க செய்­தது எமது அர­சாங்­கமே. நாம் ஒரு­போதும் நாட்டை காட்டிக் கொடுக்­க­வில்லை நாட்டை காட்டிக் கொடுக்கும் ஒப்­பந்­தங்­களும் செய்­ய­வில்­லலை எந்த ஒரு வெளிநாடும் எமது நாட்­டினை தீண்­டவும் ஒரு போதும் அனு­மதி வழங்­க­வில்லை. உலக நாடுகள் உணவுப் பஞ்சம். நிதிப்­பற்­றாக்­குறை போன்­ற­வற்றை எதிர்நோக்­கிய போதும் அவ்­வாறான நிலை­யினை எமது நாட்­டவர் காண இடம் கொடுக்­காது யுத்­த­த்தி­னையும் எதிர்கொண்­டது எமது அர­சாங்கம் மாத்­தி­ரமே. ஆனால் இன்று அரச ஊழி­யர்­க­ளுக்கு சம்­பளம் கொடுக்க பணம் இல்லை என்­கி­றது புதிய அர­சாங்கம். எமது அரசின் செயற்­பா­டு­க­ளுடன் புதிய அரசின் செயற்­பா­டு­களை ஒப்­பிட்டுப் பார்த்தால் வெட்­கப்­பட வேண்­டிய நிலை புதிய அர­சுக்கு ஏற்­படும். அன்று வெளிநா­டு­களில் உள்ள அதி­வேக வீதி­க­ளையும் பல­­மாடிக் கட்­ட­டங்­க­ளையும் கண்டு வியந்த எமது நாட்டு மக்­க­ளுக்கு அவற்றை சொந்த நாட்டில் காணக்­கூ­டிய சூழலை எமது அர­சாங்­கமும் இரா­ணு­வமும் தான் உரு­வாக்கிக் கொடுத்­தன. எதிர்காலத்தில் இலங்­கையில் பிரி­வினை வாதம் உரு­வா­கவும் நாட்டின் தேசி­யத்தை சீர் குலைக்­கவும் இனி எந்த ஒரு அமைப்­பிற்கும் நாம் இட­ம­ளிக்கப் போவதுமில்லை. அதே­வே­ளை இன்று வடக்கில் தமிழ் மக்­களும் தமிழ்த் தலை­மை­களும் சுதந்­தி­ர­மாக நட­மா­டக்­கூ­டிய சூழலை உரு­வாக்­கி­யதும் வட­ப­குதி மாண­வர்­களின் கரங்­களில் இருந்த ஆயு­தங்­க­ளுக்கு மாறாக அவர்­களை புத்­தகம் ஏந்தச் செய்ததும் இராணுவத்தினரே. அதைவிடுத்து இலங்கையில் மாகாண சபைகளை உருவாக்கக் காரணமான ராஜீவ் காந்தியை கொலை செய்த புலிகளை அஞ்சலி செய்வது அவசியமற்றது. அதே வேளை இராணுத்தினரின் தியாகங்களை மறப்பதும் வெட்கப்பட வேண்டிய செயல் என்றார்.
இராணுவத்தினரை பலியிட்டு வெற்றிகொண்டவற்றை திருப்பிக்கொடுக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் : யுத்த வெற்றி நிகழ்வில் மஹிந்த Reviewed by Author on May 19, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.