அண்மைய செய்திகள்

recent
-

புங்குடுதீவு கொலையாளிகளுக்கு மரண தண்டணை வழங்குங்கள்: கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்


புங்குடுதீவில் மாணவி வித்தியா கடந்த வாரம் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு பின் கொலை செய்யப்பட்டதனை கண்டித்து கிளிநொச்சியில் இன்று சந்தை வர்த்தகர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், தனியார் பேரூந்து உரிமையாளர்கள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர். இன்று காலை ஒன்பது மணிக்கு வியாபார நிலையங்களை மூடி வீதியில் ஒன்று கூடிய ஆர்ப்பாட்டகாரர்கள் புங்குடுதீவில் மாணவி வித்தியாவின் கொலையில் சம்மந்தப்பட்டவர்களுக்கு மரணதண்டணை வழங்குங்கள், கொலையாளிகளுக்கு ஆதரவாக சட்டதரணிகள் ஆஜராக கூடாது, பெண்களின் உரிமைகளை பாதுகாக்கப்பட வேண்டும், பெண்களுக்கு எதிரான வனமுறைகள் நிறுத்தப்பட வேண்டும், உள்ளிட்ட பல கோசங்களையும் எழுப்பியதோடு பதாதைகளையும் தாங்கியிருந்தனர். நல்லாட்சியில் பெண்கள் நாசமாக்கப்படுகின்றார்கள் சட்டமே அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கு அரசே உரிய நடவடிக்கையை மேற்கொள் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கோசங்களை எழுப்பியிருந்தனர். ஆர்பாட்டத்தின் இறுதியில் ஜனாதிபதிக்கான மகஜர் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுபதிகாரி அவர்களிடமும், வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மாவட்ட அரச அதிபர் ஆகியோருக்கும் மகஜர்கள் வழங்கப்பட்டன.
புங்குடுதீவு கொலையாளிகளுக்கு மரண தண்டணை வழங்குங்கள்: கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் Reviewed by Author on May 19, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.