தேர்தல் சட்டங்களை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: தேர்தல்கள் ஆணையாளர்

தேர்தல் சட்டங்களை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று அறிவித்துள்ளார்.
தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்படும் அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்டமா அதிபரின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
19ம் திருத்தச் சட்டத்தில் இவ்வாறு தேர்தல் சட்டங்களை மீறும் அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எனக்கு அதிகாரம் உண்டு.
வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் ஜூலை மாதம் 6ம் திகதி முதல் பொலிஸ் உத்தியோகத்தாகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட முடியாது.
உயர்தரப் பரீட்சை நடைபெறும் பாடசாலைகளில் வாக்குகள் எண்ணப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
தேர்தல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தத் தகவல்களை தெரிவித்தார்.
இதேவேளை, அரசாங்கம் தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
தேர்தல் சட்டங்களை மீறி நியமனங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேர்தல் சட்டங்களை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: தேர்தல்கள் ஆணையாளர்
Reviewed by Author
on
June 30, 2015
Rating:

No comments:
Post a Comment