தேசியமட்டத்தில் 2 ஆம் இடத்தை பெற்ற மாணவிகள் கௌரவிப்பு-Photos
தேசிய மட்டத்தில் நடனப்போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்ற மாணவிகளை அமைச்சர் றிஸாட் பதியூதீன் கௌரவித்திருக்கின்றார்.
பாடசாலைகளுக்கு இடையில் தேசிய மட்ட நடன போட்டி அண்மையில் இடம் பெற்றிருந்தது.
குறித்த போட்டியில் மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பெரிய மடு மகாவித்தியாலயம் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.
நடன போட்டியில் பங்கு பற்றி இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட மாணவிகளை நேற்று செவ்வாய்க்கிழமை கைத்தொhழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிஸாட் பதியூதீன் சான்றிதழ் வழங்கி கௌரவித்திருக்கின்றார்.
இந்நிகழ்வின் போது வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியூதீன், மடு வலயக்கல்விப்பணிப்பாளர் குரூஸ் மற்றும் மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
தேசியமட்டத்தில் 2 ஆம் இடத்தை பெற்ற மாணவிகள் கௌரவிப்பு-Photos
Reviewed by NEWMANNAR
on
June 17, 2015
Rating:

No comments:
Post a Comment