சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை : இரு புதிய அணிகளை தெரிவு செய்ய நடவடிக்கை
ஐ.பி.எல். ஸ்பொட் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் சபை குறித்த அணிகளுக்கு பதிலாக இரு புதிய அணிகளை தேர்வு செய்யலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் எதிர்வரும் ஐ.பி.எல். போட்டிகளில் 6 அணிகள் விளையாடுமா? அல்லது புதிதாக 2 அணிகள் இணைக்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட 2 அணிகளையும் கிரிக்கெட் சபை ஏற்று நடத்துமா? என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.
இது தொடர்பாக ஐ.பி.எல் ஆட்சி மன்ற குழுவில் முடிவு எடுக்கப்படும் என்று கருதப்பட்டது. ஆனால் அண்மையில் இடம்பெற்ற ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழுவில் உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. தடை குறித்து லோதா கமிட்டி அளித்த தீர்ப்பை ஆராய 4 பேர் கொண்ட குழுவை கிரிக்கெட் சபை நியமித்தது.
இந்த குழுவுக்கு 6 வார காலம் அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கைக்கு பின்னரே இந்த பிரச்சினையில் என்ன முடிவு எடுக்கப்படும் என்று தெரியவரும்.
இந்நிலையிலேயே சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக இரு புதிய அணிகளை 2 ஆண்டுகளுக்கு ஏலம் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்று ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழுவில் பெரும் பாலான உறுப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுயள்ளன.
இதனால் இந்திய கிரிக்கெட் சபை இரு புதிய அணிகளை தேர்வு செய்யலாம் என்று தெரிகிறது.
சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை : இரு புதிய அணிகளை தெரிவு செய்ய நடவடிக்கை
Reviewed by Author
on
July 21, 2015
Rating:

No comments:
Post a Comment