அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் உப்புக்குளத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேர்தல் கட்சி அலுவலகம் திறந்து வைப்பு.-Photos



மன்னார் உப்புக்குளத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேர்தல் கட்சி அலுவலகம் நேற்று(20) திங்கட்கிழமை மாலை 7 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகத்தை சிறிலங்கா முஸ்ஸீம் காங்கிரசின் தேசியத் தலைவரும்,நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான ரவூப் ஹக்கிம் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அங்கு கட்சியின் பிரமுகர்கள்,கட்சி ஆதரவாளர்கள் முன்னிலையில் அமைச்சர் உரை நிகழ்த்தினார்.

இதன் போது சிறிலங்கா முஸ்ஸீம் காங்கிரசின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,இடம் பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலின் தலைமை வேட்பாளருமான சட்டத்தரணி முத்தலீப் பாபா பாரூக் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பாக வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் வோட்பாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.









மன்னார் உப்புக்குளத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேர்தல் கட்சி அலுவலகம் திறந்து வைப்பு.-Photos Reviewed by NEWMANNAR on July 21, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.