அண்மைய செய்திகள்

recent
-

உடுவிலில் கூட்டமைப்பின் முதலாவது பிரசாரக் கூட்டம்


தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.தேர்தல் மாவட்­டத்­திற்­கான முத­லா­வது பிர­சாரக் கூட்டம் அதன் தலைவர் இரா. சம்­பந்தன் தலை­மையில் எதிர்­வரும் 25ஆம் திகதி உடு­விலில் நடை­பெ­ற­வுள்­ளது.


இது தொடர்பில் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும் யாழ். மாவட்ட முதன்மை வேட்­பா­ள­ரு­மான மாவை. சேனா­தி­ராஜா தெரி­விக்­கையில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தனது தேர்தல் செயற்­பா­டு­களை விரை­வாக ஆரம்­பிக்­க­வுள்­ளது.

இரண்டு வார காலத்­தினுள் தமிழ் மக்­களின் நீண்­ட­கா­ல­ இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு உட்­பட வட­கி­ழக்கு வாழ் மக்­களின் அன்­றாட பிரச்­சி­னை­களை உள்­ள­டக்கி எமது தேர்தல் விஞ்­ஞா­ப­ன­மா­னது வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது.

இதே­வேளை, எதிர்­வரும் 17ஆம் திகதி மன்னார் மாவட்­டத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் அலு­வ­லகம் திறக்­கப்­ப­ட­வுள்­ளது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தலை­மையில் முத­லா­வது பிர­சாரக் கூட்டம் 25ஆம் திகதி சனிக்­கி­ழமை உடு­விலில் நடை­பெ­ற­வுள்­ளது.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தனது உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடல்களை மேற்-கொண்டு பிரசார செயற்பாடுகளை முன்னெ-டுக்க-வுள்ளது. தமிழ் மக்கள் இந்தத் தேர்தலிலும் தமது ஆணையை எமக்கே அளிப்பார்கள் என்ற பெரும் நம்பிக்கை எமக்குள்ளது என்றார்.
உடுவிலில் கூட்டமைப்பின் முதலாவது பிரசாரக் கூட்டம் Reviewed by NEWMANNAR on July 15, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.