இலங்கை தொடர்பில் சர்வதேசத்தின் தப்பான எண்ணத்தை போக்க நடவடிக்கை எடுப்பேன்...
முன்னாள் பிரித்தானிய பிரதமர் டொனி பிளேயர் இலங்கை தொடர்பாக சர்வதேசத்தில் உள்ள தப்பான எண்ணத்தை சரி செய்வதற்கு முன்னிற்பேன் என முன்னாள் பிரித்தானிய பிரதமர் டொனி பிளேயர் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள டொனி பிளேயர் நேற்று மாலை ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி செயலக ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கை தொடர்பாக சர்வதேசத்தில் உள்ள தப்பான எண்ணத்தை சரி செய்வதற்கு முன்னிற்பதாக டொனி பிளேயர் தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த பாராளுமன்றத் தேர்தலை மிகவும் அமைதியான மற்றும் சுதந்திரமான தேர்தலாக நடத்துவதற்கு செயற்பட்டமை தொடர்பாக ஜனாதிபதிக்கு அவர் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
அத்துடன் நாட்டுக்கு சிறந்த அரச தலைமை தாங்கி, ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து மகிழ்ச்சியடைந்தார்.
மேலும் டொனி பிளேயர் மன்றத்தின் சர்வதேச வேலைத்திட்டத்திற்குள் இலங்கையுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு முடியுமாக இருக்குமென இதன்போது ஜனாதிபதியிடம் விளக்கினார்.
அத்துடன் இலங்கையில் சுற்றுலாத்துறை அடைந்து வரும் முன்னேற்றத்தை பாராட்டிய அவர் மேலும் அதன் வளர்ச்சிக்காக வழங்கக்கூடிய சகல ஒத்துழைப்புகளையும் பெற்றுக் கொடுப்பதாக இதன் போது அவர் குறிப்பிட்டார்.
இலங்கை தொடர்பில் சர்வதேசத்தின் தப்பான எண்ணத்தை போக்க நடவடிக்கை எடுப்பேன்...
Reviewed by Author
on
August 25, 2015
Rating:

No comments:
Post a Comment