அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை தொடர்பில் சர்வதேசத்தின் தப்பான எண்ணத்தை போக்க நடவடிக்கை எடுப்பேன்...


முன்னாள் பிரித்தானிய பிரதமர் டொனி பிளேயர்  இலங்கை தொடர்­பாக சர்­வ­தே­சத்தில் உள்ள தப்­பான எண்­ணத்தை சரி செய்­வ­தற்கு முன்­னிற்பேன் என முன்னாள் பிரித்­தா­னிய பிர­தமர் டொனி பிளேயர் தெரி­வித்­துள்ளார்.

தனிப்­பட்ட விஜயம் ஒன்றை மேற்­கொண்டு இலங்­கைக்கு வந்­துள்ள டொனி பிளேயர் நேற்று மாலை ஜனா­தி­பதி மைத்­த­ி ரி­பால சிறி­சே­னவை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் சந்­தித்து உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்­பாக ஜனா­தி­பதி செய­லக ஊடகப் பிர­ிவு வி­டுத்­துள்ள அறிக்­கையில் மேலும் குறிப்­பிட்­டுள்­ள­தா­வது,

இலங்கை தொடர்­பாக சர்­வ­தே­சத்தில் உள்ள தப்­பான எண்­ணத்தை சரி செய்­வ­தற்கு முன்­னிற்­ப­தாக டொனி பிளேயர் தெரி­வித்­துள்ளார். அத்­துடன் கடந்த பாரா­ளு­மன்றத் தேர்தலை மிகவும் அமை­தி­யான மற்றும் சுதந்­தி­ர­மான தேர்­த­லாக நடத்­து­வ­தற்கு செயற்­பட்­டமை தொடர்­பாக ஜனா­தி­ப­திக்கு அவர் பாராட்­டுக்க­ளையும் தெரி­வித்தார்.

அத்­துடன் நாட்­டுக்கு சிறந்த அரச தலைமை தாங்கி, ஜன­நா­யகம் மற்றும் நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­திரிபால­ சி­றி­சேன முன்­னெ­டுக்கும் வேலைத்­திட்­டங்கள் குறித்து மகிழ்ச்­சி­ய­டைந்தார்.

மேலும் டொனி பிளேயர் மன்­றத்தின் சர்­வ­தேச வேலைத்­திட்­டத்­திற்குள் இலங்­கை­யுடன் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வ­தற்கு முடி­யு­மாக இருக்­கு­மென இதன்­போது ஜனா­தி­ப­தி­யிடம் விளக்­கினார்.

அத்­துடன் இலங்­கையில் சுற்­று­லாத்­துறை அடைந்து வரும் முன்னேற்றத்தை பாராட்டிய அவர் மேலும் அதன் வளர்ச்சிக்காக வழங்கக்கூடிய சகல ஒத்துழைப்புகளையும் பெற்றுக் கொடுப்பதாக இதன் போது அவர் குறிப்பிட்டார்.

இலங்கை தொடர்பில் சர்வதேசத்தின் தப்பான எண்ணத்தை போக்க நடவடிக்கை எடுப்பேன்... Reviewed by Author on August 25, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.