அண்மைய செய்திகள்

recent
-

கட்சி யாப்பைக் காட்டி எம்.பி.க்களின் சுதந்திரத்தை பறிப்பதற்கு முனைந்தால் போராட்டம் வெடிக்கும்...


கட்சி யாப்பை காட்டி எம்.பி.க்களின் சுதந்­தி­ரத்தை பறிப்­ப­தற்கு முனைந்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும். நீதியின் உத­வியை நாடுவோம் என மஹிந்த அணி ஆத­ர­வா­ளர்­க­ளான வாசு, விமல், தினேஷ் ஆகியோர் கூட்­டாக அறி­வித்­தனர்.

மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தேசியப் பட்­டி­யலில் இடம் வழங்­கி­யமை வெட்கித் தலை­கு­னியும் செய­லாகும் என்றும் இவ்­வணி தெரி­வித்­தது.

கொழும்பு, நாரஹேன்­பிட்டி அபே­ராம விஹா­ரையில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டது.
இங்கு உரை­யாற்­றிய வாசு­தேவ நாண­யக்­கார எம்.பி., ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ராக அதன் அதி­கா­ரத்தை கையி­லெ­டுத்து சர்­வா­தி­கா­ர­மாக செயற்­ப­டு­கின்றார்.

ஐ.தே.கட்­சி­யுடன் இணைந்து தேசிய அர­சுக்கு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்­டு­மென சுதந்­திரக் கட்சி எம்.பி.க்களை அச்­சு­றுத்­து­கின்றார். இதற்கு மத்­தி­யிலும் சில எம்.பி.க்கள் தாம் பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சி­யாக செயற்­ப­டுவோம் என முடி­வெ­டுத்­துள்­ளனர்.

இம் முடிவை ஜனா­தி­பதி ஏற்கும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. எனவே தொடர்ந்தும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் யாப்பைக் காட்டி எம்.பி.க்கள் ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என அச்­சு­றுத்தி அவர்­களின் சுதந்­தி­ரத்தை பறிக்க ஜனா­தி­பதி முயற்­சித்தார். அதனை எதிர்த்து மக்­களை வீதியில் இறக்கிப் போரா­டுவோம்.

அது மட்­டு­மல்­லாது நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்­வ­தற்கும் தீர்­மா­னித்­துள்ளோம். எதிர்க்­கட்­சியில் இருந்து கொண்டு தேர்தல் முறை மாற்றம், கணக்­காய்­வாளர் நாயகம் தெரி­வுக்­குழு உட்­பட தகவல் அறியும் சட்ட மூலத்தை நிறை­வேற்றிக் கொள்வ­தற்கு எமது பங்­க­ளிப்பை வழங்­குவோம். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கு மக்கள் வாக்­க­ளித்­தனர். அதனை ஐ.தே. கட்­சிக்கு தாரை வார்ப்­பது மக்­களின் ஆணையை மீறும் காட்டிக் கொடுப்­புக்கு ஒப்­பா­ன­தாகும். ரூபாவின் மதிப்பு குறைக்­கப்­பட்டு நாட்டின் பொருளாதாரம் பின்­ன­டைவைக் கண்­டுள்­ளது என்றும் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார்.

விமல் வீர­வன்ச எம்.பி.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி ஊடாக மக்­க­ளுக்கு கட­மையை செய்ய முடி­யா­விட்டால் மாற்று அணியை உரு­வாக்­குவோம் என இங்கு உரை­யாற்­றிய விமல் வீர­வன்ச எம்.பி. தெரி­வித்தார்.

ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரத்­திற்கு முது­கெ­லும்­பில்­லாத சிலர் அடி­மை­யா­கி­யுள்­ளனர். இதில் ‘‘விஷப்” போத்­தலை ஐ.தே. கட்­சிக்கு அருந்தச் சொன்ன டிலான் பெரே­ராவும் உள்­ள­டங்­கி­யி­ருப்­பது வெட்கக் கேடாகும் என்றும் அவர் தெரி­வித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில், மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு தேசியப் பட்­டி­யலில் இடம் கொடுத்­த­வர்­க­ளுக்கும், அதனை பெற்றுக் கொண்­ட­வர்­க­ளுக்கும் ‘‘வெட்கம்” இல்­லை­யென்றே கூற வேண்டும்.ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன திட்­ட­மிட்டு மேற்­கொண்ட சதி நட­வ­டிக்­கைகள் கார­ண­மா­கவே ஐ.ம.சு. முன்­ன­ணிக்கு 10 இலட்சம் வாக்­குகள் கிடைக்­காமல் போனது. தேசியப் பட்­டியல் இன்று அக­தி­களின் முகா­மாக மாறி­விட்­டது.

தேர்தல் நீதி­யா­னதும் சுதந்­த­ிர­மான­து­மாக நடை­பெற்­றது எனக் கூறப்­ப­டு­கி­றது. ஆனால் ஜனாதிபதி ஐ.தே. கட்சிக்கு சார்புத் தன்மையாக செயற்பட்டார். தேர்தல் நெருங்கும் போது மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதிராகவும் ஐ.ம.சு. முன்னணிக்கு எதிராகவும் பல சதிகளை அரங்கேற்றினார். எனவே இத் தேர்தல் சுதந்திரமாக நடை பெற்றது எனக் கூற முடியாது என்றும் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.

கட்சி யாப்பைக் காட்டி எம்.பி.க்களின் சுதந்திரத்தை பறிப்பதற்கு முனைந்தால் போராட்டம் வெடிக்கும்... Reviewed by Author on August 25, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.