அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை


தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் நாளை காலை 9 மணிக்கு ஆஐராகுமாறு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

கடந்த 31ம் திகதி சாவகச்சேரி நகரில் மேற்படி கட்சியினர் பிரசாரத்திலீடுபட்டிருந்த நிலையில் தேர்தல் சட்டத்திற்கு மாறாக பிரசாரத்திலீடுபட்டதாக கூறி கட்சியின் வேட்பாளர் ஒருவர் உட்பட 3 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக கட்சியின் தலைவர் என்ற வகையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இந்த விடயத்தில் தாம் தேர்தல் சட்டத்தை மீறாத வகையில் தேர்தல் ஆணையாளர் விடுத்த சட்ட விளக்கங்களுக்கு அமையவே தாம் நடந்து கொண்டதாக தெரிவித்திருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த வழக்கில் பொலிஸாருக்கு எதிராக தாம் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை Reviewed by NEWMANNAR on August 05, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.