அண்மைய செய்திகள்

recent
-

வன்­மு­றையில் ஈடு­ப­டு­ப­வர்­களின் தலையில் துப்­பாக்கிச் சூடு நடத்த உத்­த­ரவு...


நாளை நடை­பெ­ற­வுள்ள பொதுத் தேர்­த­லின்­போது வாக்­க­ளிப்பு நிலையம் மற்றும் வாக்­கெண்ணும் நிலை­யங்­களில் வன்­முறைகளில் ஈடு­ப­டு­ப­வர்­களின் தலையில் துப்­பாக்கிச் சூடு நடத்­து­மாறு தேர்தல் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய பொலி­ஸா­ருக் கு கட்­டளை பிறப்­பித்­துள்ளார்.

எட்­டா­வது பாரா­ளு­மன்றத் தேர்­தலை நீதி­யா­னதும் சுதந்­தி­ர­மா­ன­து­மான தேர்­த­லாக நடத்­து­வது அவ­சி­ய­மாகும். அதற்­கி­ணங்­கவே நாளை நடை­பெ­ற­வுள்ள தேர்­த­லின்­போது வாக்­க­ளிப்பு நிலையம் மற்றும் வாக்­கெண்ணும் நிலை­யங்­களில் அத்­து­மீறி வன்­ மு­றை­களில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்­கெ­தி­ராக பாது­காப்பு பிரிவு உச்­ச­கட்ட அதி­கா­ரத்தைப் பிர­யோ­கித்து தலையில் சுடு­மாறும் தேர்தல் ஆணை­யாளர் பொலி­ஸாரை வேண்­டி­யுள்ளார்.

தேர்­தலின் போதும் தேர்­தலின் பின்­னரும் நாட்டின் அமைதி பாது­காக்­கப்­பட வேண்டும். அத்­துடன் வாக்­கா­ளர்கள் எது­வித கெடு­பி­டி­க­ளு­மின்றி வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்கு சென்று சுதந்­தி­ர­மான முறையில் வாக்­க­ளிக்க வேண்டும். அதற்­கான ஏற்­பா­டு­களை செய்து கொடுப்­பது தேர்தல் திணைக்­க­ளத்தின் கட­மை­யாகும். அதற்­கி­ணங்க அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தத்­தி­னூ­டாக ஒதுக்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரத்­திற்­க­மைய தேர்தல் திருத்தச் சட்­டங்­களை உரிய முறையில் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. எனவே அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தத்­தி­னூ­டாக வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரத்­திற்­கி­ணங்­கவே வன்­மு­றையில் ஈடு­ப­டு­ப­வர்­களின் தலையில் துப்­பாக்கிச் சூடு நடத்­து­மாறு பொலி­ஸா­ருக்கு பணிப்­புரை விடுத்­துள்ளேன்.

எனவே வாக்­கா­ளர்கள் எந்­த­வொரு அழுத்­த­மு­மின்றி சுதந்­தி­ர­மாக தாம் விரும்­பிய கட்­சிக்கோ அல்­லது தாம் விரும்­பிய சுயேச்சைக் குழு­வுக்கோ வாக்­க­ளிக்­கலாம். அதற்­கான சகல பாது­காப்பு ஏற்­பா­டு­களும் செய்­யப்­பட்­டுள்­ளன. வன்­முறைச் சம்­ப­வங்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் பணியில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். மேலும் தேவைப்­ப­டு­மி­டத்து பொலிஸார் இரா­ணு­வத்­தி­னரின் உத­வி­யினை பெறு­வ­தற்­கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் வன்முறைகள் இடம்பெறலாம் என சந்தேகிக்கப்படும் பிரதேசங்களில் விசேட அதிரடிப்பிரிவினை நடமாடும் சேவையில் ஈடுபடுத்தவும் பொலிஸ் மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.

வன்­மு­றையில் ஈடு­ப­டு­ப­வர்­களின் தலையில் துப்­பாக்கிச் சூடு நடத்த உத்­த­ரவு... Reviewed by Author on August 16, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.