மன்னாரில் மாபெரும் இரத்ததான நிகழ்வு…-Photos
மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் கீழ் இயங்கிவரும் “உதவிக்கரம்” ((Centre For Disabled) நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வு 23.10.2015 வெள்ளிக்கிழமை அன்று CFD நிலையத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குனர் அருட்பணி ம.ஜெயபாலன் அடிகளாரினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந் நிகழ்வில் மன்னாரில் இயங்கிவரும் பின்வரும் அமைப்புக்கள் மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து மொத்தமாக 52 நன்கொடையாளர்கள் இரத்ததானம் செய்ய தங்களை அர்ப்பணித்திருந்தனர்.
கறிற்றாஸ் வாழ்வுதயம்
உதவிக்கரம் ( (Centre For Disabled)
Motivation Sri Lanka
Cooperatve Insurance
சித்திவிநாயகர் இந்து கல்லூரி
கிறின் பீல்ட் விளையாட்டுக் கழகம்
PLC-Mannar
Good Friend Making
Ceylinco Insurance General
ஏனைய பொது நலன் விரும்பிகள்
இவ் இரத்ததான நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குனர் அருட்பணி ம.ஜெயபாலன் அடிகளாரின் சார்பில் “உதவிக்கரம்” நிலையத்தின் திட்ட முகாமையாளர் திரு.எமில்ராஜா அவர்கள் தமது மனமார்ந்த நன்றிகளை www.Newmannar.com ஊடாக தெரிவித்துக் கொள்கின்றார்.
மன்னாரில் மாபெரும் இரத்ததான நிகழ்வு…-Photos
Reviewed by NEWMANNAR
on
October 23, 2015
Rating:

No comments:
Post a Comment