அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உள்ளீடுகள் வழங்கி வைப்பு.-Photos


மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு இன்று(9) வெள்ளிக்கிழமை காலை மன்னார் உயிலங்குளம் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் பிரதி மாகாண விவசாய பணிப்பாளரின் தலைமையில் இடம் பெற்றது.

குறித்த உள்ளீடுகள் வழங்கும் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண விவசாய அமைச்சர் பா.ஐங்கரநேசன்,மற்றும் கௌரவ விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஞா.குணசீலன்,சட்டத்தரணி பிரிமூஸ் சிறாய்வா மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விவசாயம் மற்றும் தோட்டச் செய்கைகளை மேற்கொள்ள தேவையான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

-குறிப்பாக விதை நெல்,உரம்,பழக்கண்றுகள்,மரக்கறி விதைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டதோடு விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு தெரிவு செய்யப்பட்ட விவசாயிகள் 10 பேரூக்கு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசேலைகளும் வழங்கி வைக்கப்பட்டது.

-விவசாயிகளுக்கான குறித்த உள்ளீடுகளை வடமாகாண விவசாய அமைச்சர் பா.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,சட்டத்தரணி பிரிமூஸ் சிறாய்வா ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.






மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உள்ளீடுகள் வழங்கி வைப்பு.-Photos Reviewed by NEWMANNAR on October 09, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.