மன்னாரில் வர்த்தக நிலையங்களில் இரவுவரை கடமையாற்றும் பெண்கள்: புத்திஜீவிகள் விசனம்
மன்னார் பஸார் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் கடமையாற்றுகின்ற பெண்கள் பலர் தாமதித்த நேரத்தின் பின்பே வீடு செல்ல அனுமதிக்கப்படுவதாகவும், இதனால் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்களும், புத்திஜீவிகளும் கவலை தெரிவித்துள்ளனர்.
மன்னார் பஸார் பகுதியில் உள்ள பல வர்த்தக நிலையங்களில் குடும்பப்பெண்களும், இளம் யுவதிகளும் கடமையாற்றி வருகின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் இளம் யுவதிகளாக உள்ளனர்.
குறித்த யுவதிகள் காலை 8.30 மணிக்கு தாம் கடமையாற்றுகின்ற வர்த்தக நிலையங்களுக்குச் செல்லுகின்றனர்.மீண்டும் இவர்கள் 6.30 மணிக்கு முன் வீடு திரும்ப வேண்டிய நிலை உள்ளது.
சில வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தமது வர்த்தக நிலையங்களில் கடமையாற்றுகின்ற பெண்களை மாலை 6.30 மணியுடன் வீடு செல்ல அனுமதிக்கின்றனர்.
ஆனால் பலர் வர்த்தக நிலையங்களில் கடமையாற்றுகின்ற பெண்கள் வர்த்தக நிலையம் மூடும் வரை கடமையாற்ற பணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரவு 8.15 மணிவரை சில வர்த்தக நிலையங்களில் பெண்கள் கடமையாற்றுகின்றதை காணக்கூடியதாக உள்ளது.
அத்தோடு நேரம் தாமதித்து வீடு செல்ல அனுமதிப்பதினால் குறித்த பெண்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவ்விடையத்தில் மன்னார் வர்த்தக நிலையம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பாக பெண்கள் அமைப்பு குறித்த விடையத்தில் அக்கறை செலுத்தி குறித்த வர்த்தக நிலையங்களில் கடமையாற்றுகின்ற பெண்களை உரிய நேரத்திற்கு வீடுகளுக்குச் செல்ல நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சமூக ஆர்வலர்களும்,புத்திஜீவிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னாரில் வர்த்தக நிலையங்களில் இரவுவரை கடமையாற்றும் பெண்கள்: புத்திஜீவிகள் விசனம்
Reviewed by NEWMANNAR
on
October 09, 2015
Rating:

No comments:
Post a Comment