தந்தையை நாய் கூட்டில் சிறை வைத்து நாய்களை கட்டிலில் உறங்க வைத்த பெண் கைது : கண்டியில் சம்பவம்...
73 வயதான தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்திருந்த மகள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலகொல்ல பகுதியிலே இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து, 42 வயதான பெண்ணொருவரையே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பலகொல்ல காவல்துறையினர், அந்தப் பகுதியால் சென்ற வேளை குறித்த கூட்டினைக் கண்டுள்ளனர்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த வயோதிபரின் மகளே அவரை கூட்டில் அடைத்து வைத்தமை தெரியவந்துள்ளது.
பின்னர் 73 வயதான அந்த முதியவர் மெனின்கின்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பலகொல்ல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தனது தந்தை சிறுநீர் மற்றும் மலம் கழித்து வீட்டை அசுத்தப்படுத்துவதாலேயே அவரை நாய்க்கூட்டினுள்ள வைத்ததாக இந்தப் பெண் பொலிஸில் தெரிவித்துள்ளார்.
செல்லப்பிராணயாக வளர்க்கும் வெளிநாட்டு நாய்கள் மற்றும் அதன் குட்டிகள் என்பன சுதந்திரமாகவும் சொகுசாகவும் வீட்டினுள் வளர்ந்துவரும் நிலையில் இந்தப் பெண் தனது 73 வயது தந்தையை நாய்க்கூட்டினுள் அடைத்து வைத்திருந்துள்ளார்.
நாய்க் கூட்டில் வசித்து வந்துள்ள குறித்த பெண்ணின் தந்தை முன்னர் கண்டியிலுள்ள மிகப் பிரபலாமான உயர் வகை ஹோட்டலில் பணிபுரிந்தவர் என்பதோடு. அவரது ஒரேயொரு பிள்ளையே இந்தப் பெண் ஆவார்.
பேசுவதற்குக் கூட முடியாமல் மிகவும் மோசமான உடல்நிலையில் காணப்பட்ட குறித்த நபரை மீட்ட பொலிஸார் மெணிக்ஹின்ன வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இது குறித்த மேலதிக விசாரணையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
தந்தையை நாய் கூட்டில் சிறை வைத்து நாய்களை கட்டிலில் உறங்க வைத்த பெண் கைது : கண்டியில் சம்பவம்...
Reviewed by Author
on
October 14, 2015
Rating:

No comments:
Post a Comment