அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 24 இந்திய மீனவர்களும் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு.-Photos


இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் கடற்படையினரினால் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்ட 24 இந்திய மீனவர்களும் தலைமன்னார் கடற்படையினரின் விசாரனைகளின் பின் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

-இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள் 4 இலுவைப்படகுகளில் இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கடல் றோர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் குறித்த மீனவர்களை கைது செய்து தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

-மீனவர்கள் வருகை தந்த 4 இலுவைப்படகுகளும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

-குறித்த இந்திய மீனவர்கள் 24 பேரூம் தலைமன்னார் கடற்படையினரினால் விசாரனைக்கு உற்படுத்தப்பட்ட நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.

-தற்போது குறித்த மீனவர்களிடம் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலத்தை பதிவு செய்து வரும் நிலையில் அவர்கள் 24 பேரையும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாக கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 24 இந்திய மீனவர்களும் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு.-Photos Reviewed by NEWMANNAR on October 13, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.