யாழிற்கு படையெடுக்கும் தென்னிலங்கை வியாபாரிகள்! உள்ளூர் வர்த்தர்கள் பாதிப்பு...
திருவிழாக் கால வியாபாரிகள் போன்று பண்டிகைக் காலங்களில் யாழ்ப்பாணத்திற்கு படையெடுத்து வந்து கடை பரப்பும் தென்னிலங்கை வியாபாரிகளால் யாழ்ப்பாண வர்த்தகர்கள் பெரும் பாதிப்புகளை எதிர் கொள்வதாக வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தென்னிலங்கை வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கும் விடயத்தில் குடாநாட்டு வியாபாரிகளுக்கு ஏற்படுகின்ற பாதிப்பை கருத்திற் கொள்ளாது,
மாநகர சபை உட்பட உரிய தரப்பினர்கள் பொறுப்பற்ற விதத்தில் தொடர்ந்தும் நடந்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தகர்கள் பல்வேறு பாதிப்புக்களுக்கு மத்தியில் தமது வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் பல்வேறு பிரச்சினைகளையும் தொடர்ச்சியாக எதிர்நோக்கி வருகின்றனர். இதனால் பொருளாதார ரீதியாகவும் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட நிலையிலையே இருக்கின்றனர்.
இத்தகைய பாதிப்புக்களுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தகர்கள் தமது வியாபார நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடை பாதை வியாபாரிகளினால் சொல்லெணாத் துன்ப துயரங்களையும் எதிர்நோக்குகின்றனர்.
இது தொடர்பில் சம்மந்தப்பட்ட பல்வேறு தரப்பினர்களுக்குத் தெரியப்படுத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலையே காணப்படுகிறது.
இவ்வாறான நிலையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தென்னிலங்கை வியாபாரிகள் யாழ்ப்பாணத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.
தென்னிலங்கையிலிருந்து வருகின்ற வியாபாரிகள் பெருமளவில் விளம்பரம் செய்து தள்ளுபடி விலையில் தரமற்ற பொருட்களை விற்கின்றனர். இந்தப் பண்டிகை முடிந்ததும் அவர்கள் மீண்டும் தென்னிலங்கைக்குத் திரும்பிவிடுகின்றனர்.
இதனால் தரமற்ற பொருட்களின் விலை குறைவாகவும் அதே நேரம் பெருமெடுப்பிலான விளம்பரங்களையும் செய்து, ஒரு சில நாட்கள் மட்டும் வந்து அவர்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற போது அப்பாவிப் பொது மக்களும் அவர்களையே நாடி செல்கின்றனர்.
இதனால் நாம் பாதிக்கப்படுகின்ற அதே நேரம் இங்குள்ள பொது மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
ஆனால் யாழ் நகரப் பகுதியில் வியாபாரம் செய்வதற்கு மாநகர சபையின் அனுமதி பெறப்பட வேண்டும். ஆனால் குடாநாட்டு வர்த்தகர்கள் குறித்து மாநகர சபை அக்கறை கொள்ளாமல் இதற்குரிய அனுமதிகளையும் தென்னிலங்கை வர்த்தகர்களுக்கு வழங்கி வருகின்றது.
இது குறித்து பல தரப்பினர்களுக்கும் அறிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லைத் எனத் தெரிவித்திருக்கின்ற வர்த்தகர்கள், இந்த விடயத்தில் இனியாவது பொறுப்பு வாய்ந்தவர்கள் கவனமெடுத்து செயற்படுவார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
யாழிற்கு படையெடுக்கும் தென்னிலங்கை வியாபாரிகள்! உள்ளூர் வர்த்தர்கள் பாதிப்பு...
Reviewed by Author
on
November 08, 2015
Rating:

No comments:
Post a Comment