தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 41 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்ய மன்னார் நீதிமன்றம் உத்தரவு.
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 41 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ இன்று திங்கட்கிழமை(9) உத்தவிட்டார்.
இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 41 இந்திய மீனவர்கள் கட்டம் கட்டமாக கடற்படையினரினால் கைது செய்யப்பட்டு தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு மன்னார் மீன்பிடி திணைக்கள அதிகாரிகளினூடாக மன்னார் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களில் முதலில் 35 மீனவர்களை விடுதலை செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல் விடுக்கப்படது.
அதனைத் தொடர்ந்து மேலும் விளக்கமறியலில் உள்ள 6 மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறித்த 41 இந்திய மீனவர்களும் விடுதலை செய்ய விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் இன்று(9) திங்கட்கிழமை கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளினால் மன்னார் நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டது.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு அமைவாக குறித்த 41 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.
இவர்களில் வயது குறைந்த 4 சிறுவர்களும் அடங்குகின்றனர்.இவர்கள் தற்போது அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளினூடாக இந்திய உயர்ஸ்தானிக அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா தெரிவித்தார்.
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 41 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்ய மன்னார் நீதிமன்றம் உத்தரவு.
Reviewed by NEWMANNAR
on
November 09, 2015
Rating:

No comments:
Post a Comment