சோபித தேரருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மதுபானக் கடைகள் அடைப்பு
காலம் சென்ற சோபித தேரருக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் நாடு முழுவதிலும் உள்ள மதுபான கடைகளை மூடுபதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 12ம் திகதி இறைச்சிக் கடைகள் மற்றும் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும் கொழும்பு மாவட்டத்தின் அனைத்து சினிமா அரங்குகளும் எதிர்வரும் 12ம் திகதி மூடப்படவுள்ளது.
எதிர்வரும் 12ம் திகதி தேசிய துக்க தினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது.
சோபித தேரரின் இறுதிக் கிரியைகள் நாடாளுமன்ற மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சோபித தேரருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மதுபானக் கடைகள் அடைப்பு
Reviewed by NEWMANNAR
on
November 09, 2015
Rating:

No comments:
Post a Comment