அண்மைய செய்திகள்

recent
-

முல்லை காடழிப்பு தொடர்பாக ஜனாதிபதியிடம் தெரிவிப்போம்: வடக்கு முதல்வர்....


முல்லைத்தீவு- குமுழமுனை பகுதியில் தொடரும் காடழிப்பு தொடர்பில் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டச் செயலருடன் வடமாகாண முதலமைச்சர் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
காடழிப்பு தொடர்பில் குறித்த சந்திப்பில் தகவல்களை பெற்றுக் கொண்டுள்ளதுடன், எதிர்வரும் 12ம் திகதி காடழிப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்ட குடியேற்றம் ஒன்றுக்காக முல்லைத்தீவு- குமுழமுனை குமாரபுரம் பகுதியில் சுமார் 600 ஏக்கருக்கும் அதிகளவிலான மிக பெறுமதியான காடு அழிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கடந்த சில மாதங்களாக மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதுடன்,

கடந்த 5ம் திகதி நடைபெற்ற மாகாண சபை அமர்வின்போதும் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

தொடர்ச்சியாக நேற்று முன்தினம் குறித்த காடழிப்பு தொடர்பில் வடமாகாண சபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க தவறி உள்ளதாக முல்லை மாவட்ட சமூக அமைப்புக்கள் மற்றும் சுற்றாடல் ஆர்வலர்கள், மக்கள் இணைந்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந் நிலையில் குறித்த விடயம் தொடர்பாக முதலமைச்சரிடம் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது,

தாம் முல்லை மாவட்டச் செயலர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரனுடன் சந்திப்பொன்றை நடத்தியமை தொடர்பிலும், எதிர்வரும் 12ம் திகதி மேற்படி காடழிப்பு விடயம் தொடர்பாக ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

இதன்போது முதலமைச்சர் மேலும் கூறுகையில்,

முல்லை காடழிப்பு விடயம் தொடர்பாக நாம் மாவட்டச் செயலர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரனை எனது அலுவலகத்தில் சந்தித்து பேசியிருக்கின்றேன்.

மேற்படி விடயம் தொடர்பான சில தகவல்களை பெறுவதற்கான சந்திப்பாக இன்றைய சந்திப்பு அமைந்தது.

இந்நிலையில் நானும் வடமாகாண அமைச்சர்களும் எதிர்வரும் 12ம் திகதி ஜனாதிபதியை கொழும்பில் சந்திக்கவுள்ள நிலையில் குறித்த காடழிப்பு விடயம் தொடர்பாக சுட்டிக்காட்டுவோம்.

ஜனாதிபதியுடனான சந்திப்பில் பல்வேறு முக்கியமான விடயங்கள் தொடர்பாக பேசவுள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பாகவும் நிச்சயம் சுட்டிக்காட்டுவதற்குத் தீர்மானித்திருக்கின்றோம்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண சபை எடுக்க முடிந்த அத்தனை நடவடிக்கைகளையும், தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் நடவடிக்கைகளை எடுக்கும் என்றார்.

முல்லை காடழிப்பு தொடர்பாக ஜனாதிபதியிடம் தெரிவிப்போம்: வடக்கு முதல்வர்.... Reviewed by Author on November 09, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.