மூன்றரை வருடங்களாக மம்மி நிலையில் பேணப்பட்ட சீனத் துறவியின் உடல் ....
மம்மி நிலையில் பேணப்பட்ட சீனத் துறவியொருவரது உடல் மத வைபவமொன்றையொட்டி பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மூன்றரை வருடத்துக்கு முன்னர் உயிரிழந்த துறவியான பு ஹோயுவின் உடல் உருளை வடிவான கொள்கலனில் இதுவரை காலமும் பாதுகாக்கப்பட்டு வந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தென் கிழக்கு சீனா வின் புஜியான் மாகாணத்தில் குவான்ஸொயு எனும் இடத்திலுள்ள ஆலயத்தில் மேற்படி துறவியின் உடல் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக காட்சிப்படுத்தப்பட்டது.
இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
துறவியின் உடல் வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்ட போது அதனுள் அவரது உடல் நன்கு பேணப்பட்ட நிலையில் காணப்பட்டது.
அந்த உடலை பேணுவதற்காக அதனை மூடியிருந்த கரியும் சந்தணமும் நிபுணர்களால் கவனமாக அகற்றப்பட்டது.
இதன்போது அங்கு கூடியிருந்த பெருந்தொகை யான மதகுருமார் அந்த துறவிக்கு மரியாதை செலுத்தினர்.
'புனித சதை' என அழைக்கப்படும் மேற்படி துற வியின் உடலானது அந்நாட்டு பாரம்பரிய வழக்கப் பிரகாரம் தங்க உள்ளடக்கங்களால் மூடப்பட்டு பௌத்த சிலையொன்றாக மாற்றப்படவுள்ளது.
புஜியான் மாகாணத்திலுள்ள ஜின்சியாங் நகரில் 1919 ஆம் ஆண்டில் பிறந்த பு ஹோயு, தனது 13 ஆவது வயதில் துறவியானார்
மூன்றரை வருடங்களாக மம்மி நிலையில் பேணப்பட்ட சீனத் துறவியின் உடல் ....
Reviewed by Author
on
January 14, 2016
Rating:

No comments:
Post a Comment