மன்னார் நானாட்டான் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி
மன்னார் நானாட்டான் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியானது இன்று 30-01-2016 மாலை 3-00 பாடசாலை மைதானத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
வருடாந்த இல்லவிளையாட்டுப்போடடியின் இறுதி நாள் நிகழ்வுகளாக 30-01-2016 நிகழ்வுகள் ஆரம்பமானது.
இந்நிகழ்வின் விருந்தினர்களாக.....
பிரதம விருந்தினராக அருட்சகோதரர் கிறிஸ்ரி குருஸ் வடமாகாணத்திற்கான டிலாசாலியன் அருட்சகோதரர்.
சிறப்பு விருந்தினர்களாக…
அருட்தந்தை அருள்ராஜ்குருஸ் புனித மரியன்னை ஆலயப்பங்குத்தந்தை நானாட்டான்.
திருவாளர் ஏ-அஷ்கா திட்டமிடல்பணிப்பாளர் வலையக்கல்வி பணிமனை மன்னார்.
கௌரவ விருந்தினர்களாக…
திருவாளர் பி.ஞானராஜ் உடற்கல்விப்பணிப்பாளர் வலையக்கல்வி பணிமனை மன்னார்
திருவாளர் எஸ்.செல்வக்குமார் கணக்காளர் பிரதேச செயலகம் பொலன்நறுவை
இவர்களுடன் டிலாசாலியன் அருட்சகோதரர்கள் அருட்தந்தையர்கள் அருட்சகோதரர்கள் பிரதேச செயலாளர்கள் மன்னார் மவட்ட உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் உயர் அதிகாரிகள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மன்னார் நானாட்டான் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி
Reviewed by Author
on
February 01, 2016
Rating:

No comments:
Post a Comment