அண்மைய செய்திகள்

recent
-

தலைநகரில் மண்ணெண்ணெய் விளக்குகளில் 3822 வீடுகள்....



தலைநகரில் மண்ணெண்ணெய் விளக்குகளில் 3822 வீடுகள்
இவ்­வாறு மண்ணெண்ணெய் விளக்­குகள் மூலம் ஒளியை பெறும் 2898 வீடுகள் கொழும்பு பிர­தேச செய­லக பிரி­விலும் 924 வீடுகள் திம்பி­ரி­கஸ்­யாய பிர­தேச செயலக பிரி­விலும் அமைந்­துள்­ள­தாக கொழும்பு மாந­க­ர­ச­பையின் 2015ஆம் ஆண்­டுக்­கான வரவு செலவு திட்ட அறிக்­கையை சுட்­டிக்­காட்­டியே இந்த தகவல் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கொழும்பு நகரம் 15 நகர பிரி­வு­க­ளுக்கு உட்­பட்­டுள்­ள­துடன் அவற்றில் மட்­டக்­க­ளப்பு, முகத்­து­வாரம், கொட்­டாஞ்­சேனை, லுணு­கொ­குண, மாதம்­பிட்டி, கெத்­தா­ராம ஆகிய பிர­தே­சங்­க­ளி­லேயே அதி­க­மான வீடுகளில் மின்­சாரம் இன்றி மண்­ணெண்ணெய் விளக்­குகள் பிர­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றன.

கொழும்பு நகரில் ஒரு இலட்­சத்தி 18 ஆயி­ரத்து 780 வீடுகள் அமைக்­கப்­பட்­டுள்­ள­துடன் அவற்றில் ஒரு இலட்­சத்தி 14 ஆயி­ரத்து 771 வீடு­க­ளுக்கே மின்­சாரம் பெறப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, இது தொடர்­பாக கொழும்பு மாந­க­ர­சபை மேயர் ஏ.ஜே.எம்.முஸம்­மி­லிடம் வின­வி­ய­போது, கொழும்பு மாநக­ர­ச­பைக்­குட்­பட்ட பிர­தே­சங்­களில் மின்­சார வச­தி­யின்றி எந்த வீடுகளும் இல்லை. அவ்­வாறு மின்­சா­ர­வ­சதி இன்றி இருக்கும் வீடுகள் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகளாகும். அவற்றுக்கு அரசாங்கத்தினால் மின் இணைப்புக்கள் வழங்கப்படுவதில்லை என்றார்.

தலைநகரில் மண்ணெண்ணெய் விளக்குகளில் 3822 வீடுகள்.... Reviewed by Author on February 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.