அண்மைய செய்திகள்

recent
-

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இலுப்பை கடவை பிரதான வீதியில் -விபத்து! இருவர் பலி


மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இலுப்பை கடவை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இலுப்பை - அந்தோனியார் புரம் கிராமத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் மெக்ஸி (23), சதாசிவம் கயேந்திரன் (30) மற்றும் ஆர்.ரவிகுமார் (30) ஆகியோரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இதில் ஜேம்ஸ் மெக்ஸி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், சதாசிவம் கயேந்திரன் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்பே உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த ரவிகுமார் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

குறித்த மூவரும் மது போதையில் மோட்டார்சைக்கிளில் தமது வீடுகளை நோக்கி சென்றுள்ளனர்.

இதன்போது, மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பனை மரத்துடன் மோதியமையே விபத்துக்கு காரணமென கூறப்படுகிறது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இழுப்பை கடவை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இலுப்பை கடவை பிரதான வீதியில் -விபத்து! இருவர் பலி Reviewed by NEWMANNAR on February 19, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.