மன்னார் புதைகுழி கிணறு நேற்று அகழ்வு செய்யப்பட இருந்தபோதும் வெள்ளநீர் காரணமாக பின்போடப்பட்டு...
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழிக்கு அருகாமையில் காணப்படும் கிணறு ஒன்றிலும் காணாமல் போனவர்களின் மனித எச்சங்கள் காணப்படலாம் என்ற ஐயப்பாடு நிலவுவதால் அதையும் அகழ்வு செய்யப்பட வேண்டும் என காணாமல் போனவர்களின் பெற்றோர் உறவினர்கள் சார்பில் ஆஐரான சட்டத்தரனிகளின் வேண்டுகோளுக்கினங்க இவ் கிணறு நேற்று வெள்ளிக்கிழமை (19.02.2016) அகழ்வு செய்யப்பட இருந்தபோதும் அப்பகுதில் வெள்ளநீர் சூழ்ந்திருப்பதாக பொலிசார் மன்றில் தெரிவித்ததைத் தொடர்ந்து இவ் அகழ்வு பணி பின்போடப்பட்டுள்ளது.
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழிக்கு அருகாமையில் காணப்படும் கிணறு சம்பந்தமான வழக்கு விசாரனை நேற்று மன்னார் நீதிமன்றில் நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜ் முன்னலையில் விசாரனைக்கு எடுக்கப்பட்டது.
நேற்றைய வழக்கில காணாமல் போனவர்களின் பெற்றோர் உறவினர்கள் சார்பில் ஆஐரான சிரேஷ;ட சட்டத்தரனி வீ.இராஐகுலேந்திரா தலைமையில் சட்டத்தரனிகள் வீ.எஸ்.நிரஞ்சன் மற்றும் மன்னார் சட்டத்தரனிகளும் மன்றில் ஆஐராகியிருந்தனர்.
கடந்த இருவருடங்களுக்கு முன்பு மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் கோவில் வீதிக்கு அருகாமையில் குடிநீர் வழங்கும் திட்டத்துக்காக குழாய்கள் நிலத்தடியில் அமைத்து சென்றவேளையில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பின் 32 தினங்களாக குறிப்பிட்ட இடத்தை அகழ்வு செய்தபோது 82 மனித மண்டையோடுகளும் மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டு பின் அது இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இதைத் தொடர்ந்து இப்பகுதியில் ஒரு கிணறு இருப்பதாகவும் இதற்குள்ளும் காணாமல் போனவர்களின் மனித எச்சங்கள் இருக்கும் என்ற ஐயப்பாடு இருப்பதாகவும் இதையும் அகழ்வு செய்யவேண்டும் என காணாமல் போனவர்களின் பெற்றோர் உறவினர்கள் சார்பில் ஆஐரான சட்டத்தரனிகள் மன்னார் நீதிமன்றில் விண்ணப்பித்திருந்தனர்.
இதற்கமைய 26.08.2015 அன்று இவ் கிணறு இருக்கும் பகுதியை சட்டத்தரனிகளுடன் மன்னார் நீதிபதி ஆ.கி.அலெக்ஸ்ராஐh பார்வையிட்டு அப்பகுதி பற்றைகளால் சூழப்பட்டிருந்ததால் அதை துப்பரவு செய்ய கட்டளையிட்டதுடன் 28.08.2015 அவ் கிணற்றை மீண்டும் சென்று அவ் கிணற்றை அடையாளமிட்டு பொலிஸ் பாதுகாப்பும் போடுவதற்கான உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதற்கமையவே நேற்று (19) இவ் கிணறு அகழ்வு செய்வதற்கான ஆய்த்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் வழக்கு விசாரனை எடுக்கப்பட்டது. அடையாளம் காட்டப்பட்ட கிணற்றை சுற்றி வெள்ள நீர் சூழ்திருப்பதனால் இன்று இக் கருமத்தை செய்யமுடியாது எனவும் அவ்வாறு தோண்டப்பட்டாலும் எச்சங்களை கண்டுபிடிப்பதில் சிரமங்கள் ஏற்படும் என மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்று மன்னார் நீதிமன்றில் இதைத் தெரிவித்தார். அத்துடன் அவ் நிலம் உலர்ந்தபின்பே அகழ்வு செய்வது உகந்தது என்றும் மன்றில் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நீதிபதியும் காணாமல் போனவர்களின் பெற்றோர் உறவினர்கள் சார்பில் ஆஐரான சட்டத்தரனிகளும் பொலிசார் அப்பகுதி கிராம அலுவலகர் சகிதம் சென்று அவ்விடத்தை பார்வையிட்டனர்.
இருந்தும் காணாமல் போனவர்களின் பெற்றோர் உறவினர்கள் சார்பில் ஆஐரான சட்டத்தரனிகளின் விண்ணப்பத்துக்கு அமைய மன்னார் நீதவான் நேற்று அவ்விடத்தை பார்வையிட்டு பின்வருமாறு கட்டளை பிறப்பித்திருந்தார் அதாவது இங்கு சூழப்பட்டிருக்கும் வெள்ள நீரை அகற்றும்படியும் மீண்டும் இப்பகுதிக்குள் வெள்ளநீர் உட்புகாவண்ணம் அணைகட்டி இவ் நிலத்தை உலரச்செய்யும்படியும் எதிர்வரும் 2016-04-4,5,6 ஆகிய திகதிகளில் இதை அகழ்வு செய்வதற்கேதுவாக இவ் பணிகளை செய்யும்படி கட்டளையிட்டிருந்தார்.
அத்துடன் இப்பகுதியில் 75 குடும்பங்கள் வாழ்வதாக அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளதால் இதன் விபரங்களை மன்றில் சமர்பிக்கும்படி அப்பகுதி கிராம அலுவலகருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தர்.
மன்னார் புதைகுழி கிணறு நேற்று அகழ்வு செய்யப்பட இருந்தபோதும் வெள்ளநீர் காரணமாக பின்போடப்பட்டு...
Reviewed by Author
on
February 20, 2016
Rating:

No comments:
Post a Comment